Thursday, 31 August 2017

GoodNews:ஆகஸ்ட் மாதம் அசத்தல் மழை... செப்டம்பரிலும் தொடருமாம் - தமிழ்நாடு வெதர்மேன்


 சென்னை, புறநகரில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னையில் காலை முதலே பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த மழை நீடிக்கும் என்றும் கனமழை செப்டம்பர் மாதத்தில் தொடரும் என்றும் வெதர்மேன் தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில், கடந்த 50 ஆண்டுகளில் இந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதம்தான் சிறந்த மழைப்பொழிவை பெற்றுள்ளதாக, தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில், கடந்த ஆண்டு பருவமழை பொய்த்தது. இதனால், தமிழகம் முழுவதும் கடுமையான தண்ணீர்ப் பஞ்சம் நிலவியது. சென்னையில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.
இந்த ஆண்டின், தென்மேற்குப் பருவமழையின் ஆரம்பத்திலும் சுமாரான மழைப்பொழிவே காணப்பட்டது.
இதனால் கடந்த ஆண்டை போல நடப்பாண்டும் பருவமழை ஏமாற்றிவிடுமோ என்று அஞ்சிய நிலையில் ஆகஸ்ட் மாதம் பெய்த மழை கைகொடுத்தது.
ஆகஸ்ட் மாத மழை
ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கம் முதலே, தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்ய ஆரம்பித்தது. ஆகஸ்ட் மாதத்தின் முடிவில், மாநிலம் முழுவதும் பெய்த மழையால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
இந்நிலையில், ஆகஸ்ட் மாத மழைப்பொழிவுகுறித்து வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், 'கடந்த 50 ஆண்டுகளில், தமிழகத்துக்கு அதிக மழை கிடைத்த ஆகஸ்ட் மாதம் மற்றும் கடந்த 150 வருடங்களில் 8வது அதிக மழையைப் பெற்ற ஆகஸ்ட் மாதம் இது என்று பதிவிட்டுள்ளார்.1876லிருந்து புள்ளிவிவரம் இருக்கிறது. குறிப்பாக திருவண்ணாமலை, சிவகங்கை, பெரம்பலூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் சமீபத்திய ஆண்டுகளில் அதிக மழையைப் பெற்றது என்று கூறலாம்
200 ஆண்டுகளில் மழை அளவு
கடந்த 200 ஆண்டுகளில், சென்னைக்கு 9வது மழை மிகுந்த ஆகஸ்ட் மாதமும் இதுதான். சென்னையின் அதிகபட்ச மழை பெற்ற ஆகஸ்ட் மாதம் என்ற சாதனையை, 2011ஆம் ஆண்டு முறியடித்தது. அதற்கு பிறகு 2011 ஆண்டைவிட அதிக மழைகொண்ட ஆகஸ்ட் மாதம் இதுவரை வரவில்லை என்று கூறியுள்ளார். கடந்த 200 ஆண்டுகளில் செங்குன்றம் 425 மில்லி மீட்டர் அளவிற்கு இந்த ஆகஸ்ட் 2107 ஆண்டு பதிவு செய்துள்ளது என்று கூறியுள்ளார்.
கனமழைக்கு வாய்ப்பு
செப்டம்பர் மாத தொடக்கமே மழையோடு தொடங்கியுள்ளது. இது நீடிக்கும். சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கடந்த 2013 ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதியும், 29ஆம் தேதியும் கனமழை பெய்தது என்றும் பிரதீப் ஜான் குறிப்பிட்டுள்ளார்.
அனுபவிங்க மக்களே
மேகங்கள் சூழ்ந்து காணப்படுவதாகவே ரேடார் படம் காண்பிக்கிறது. ஜில்லென்ற மழையையை நன்றாக மக்கள் அனுபவிக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார். தென்மேற்கு பருவமழை ஆரம்பத்தில் ஏமாற்றினாலும் இறுதியில் கைகொடுத்துள்ளது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வடகிழக்கு பருவமழை
இன்னும் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதேபோல மேற்கு கடற்கரையோரங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்டோபரில் வடகிழக்கு பருவமழையும் கைகொடுத்தால் தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தீரும்.

Big News:Polytechnic TRB hall ticket published

இன்றைய பெட்ரோல், டீசல் விலைகள்!


M

  • பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.71.78 என நிர்ணயம். 
  • டீசலின் விலை லிட்டருக்கு ரூ.60.14. 
  • இன்று காலை 6 மணி முதல் இந்த விலைகள் அமல்

NATIONAL BEST TEACHER AWARD TRS NAME LIST-2016-OVER ALL INDIA::

NATIONAL BEST TEACHER AWARD TRS NAME LIST-2016-OVER ALL INDIA::

நாடு முழுவதும் 2016 ஆம் ஆண்டுக்கான -தேசிய நல்லாசிரியர் விருது (National Award ) பெற்றவர்களின் முழு விவரம்


Thanks To -Anbalagan HM,Pumssembur

VANDAVASI,TIRUVANNAMALai

தமிழகம் 10 கி.மீ தூரம் செல்வதை தவிர்க்க புது தேர்வு மையம் அமைக்க தேர்வுத்துறை உத்தரவு


     
தமிழக தேர்வுத்துறை சார்பில் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில், கூறப்பட்டுள்ளதாவது: 
தமிழகத்தில் அந்தந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் பற்றிய விவரங்கள் மற்றும் புதிய தேர்வு மையங்கள் கேட்கும் கருத்துருக்களை பள்ளிகள் மூலம் பெற்று தேர்வுத்துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும். தேர்வு மையம் அமைப்பது இன்றியமையாதது என்று கருதப்படும் பள்ளிகளுக்கு மட்டும் திட்டவட்டமான கருத்துருக்களை அனுப்ப வேண்டும். புதியதாக அமைய உள்ள தேர்வு மையங்கள் செயல்படுவதற்கு தகுதி உள்ளதா என்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

மேலும், போக்கு வரத்து வசதி குறைவாக இருந்து 10 கிமீ தூரத்துக்கு மேல் மாணவர்கள் பயணம் செய்து தேர்வு எழுத வேண்டிய கட்டாயத்தில் உள்ள மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில் புதிய தேர்வு மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கீகாரம் இல்லாமல் நீதி மன்ற உத்தரவு பெற்று செயல்படும் பள்ளிகள் குறித்தும் தெரியப்படுத்த வேண்டும். இந்த விவரங்கள் அடங்கிய பட்டியல்களை 15ம் தேதிக்குள் தேர்வுத்துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

விரைவில் வாட்ஸ்அப்பில் இடம்பெறும் வெரிஃபைடு குறியீடு.!




பொதுவாக பேஸ்புக் மற்றும் டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில்
போலி கணக்குகளை தெரிந்துகொள்ள வெரிஃபைடு குறியீடு பயன்படுகிறது

 மேலும் சமூக வலைதளங்களில் அதிகாரப்பூர்வ பக்கத்தை தெரிந்து கொள்ள பெயரின் பக்கத்தில்நீல வண்ண நிறத்தில் வெரிஃபைடு குறியீடு இருக்கும். கூடிய விரைவில் பேஸ்புக் மற்றும் டுவிட்டர் போன்ற சமூக வலைதளத்தில் உள்ள வெரிஃபைடு குறியீடு வாட்ஸ்அப்பிலும்இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப்பில் வெரிஃபைடு குறியீடு பச்சை நிறத்தில் வெளிவரும் என வாட்ஸ்அப் நிறுவனம் கூறியுள்ளது, மேலும்இந்தப் பயன்பாடு அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில அரசியல் பிரமுகர்கள் மற்றும் முக்கிய பிரபலங்களின் பெயர்களை பயன்படுத்தி செயல்படும் போலி கணக்குகளைகண்டறிய உதவுகிறது இந்த வெரிஃபைடு குறியீடு, மேலும் இவற்றில் பல்வேறு நண்மைகள் உள்ளது. பல தவறான தகவல்கள் பரப்புவதை தவிர்க்க இவை உதவும். கூடிய விரைவில் வாட்ஸ் மூலம் பணம் அனுப்பும் வங்கி சேவையை கொண்டு வருகிறது வாட்ஸ்அப் நிறுவனம், மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது வாட்ஸ்அப்

இன்று முதல் ரேசன் கடைகளில் ஸ்மார்ட் கார்டு மூலம் விநியோகம்


விநியோகம் செய்ய தமிழகஅரசு உத்தரவிட்டுள்ளது.தமிழக அரசின் உணவுபொருள் வழங்கல் மற்றும்நுகர்வோர் பாதுகாப்புதுறை ஆணையர்,அனைத்து மாவட்ட உணவுபொருள் வழங்கல்அலுவலர்களுக்குசுற்றறிக்கை ஒன்றைஅனுப்பியுள்ளார். 

பழையகுடும்ப அட்டைக்கு பதிலாகபுதிய மின்னணு குடும்பஅட்டைகள் அதாவதுஸ்மார்ட் கார்டுபெற்றவர்களுக்கு, கார்டுமூலமாகவே அத்தியாவசியபொருட்கள் வழங்கவேண்டும் என அதில்கூறப்பட்டுள்ளது. தற்போதுகுடும்ப அட்டைஅச்சிடப்பட்டு மண்டலமற்றும் தாலுகாஅலுவலகங்கள் மூலம்,சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடைகளுக்குஅனுப்பப்பட்டு குடும்பஅட்டைதாரர்களுக்குவழங்கப்படாமல் உள்ளஸ்மார்ட் கார்டுகளைஉடனடியாக வழங்கவேண்டும் என்றும் அதில்தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதுவரை தமிழகத்தில் 1கோடியே 42 லட்சத்து 15ஆயிரத்து 382 ஸ்மார்ட்கார்டுகள் அச்சிட்டுவழங்கப்பட்டுள்ளது.எஞ்சியவர்களுக்கு ஸ்மார்ட்கார்டுகள் வழங்கம் பணிநடைபெற்று வருவதாகவும்குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று  முதல் அனைத்துநியாய விலைக்கடைகளிலும் ஸ்மார்ட்பெற்றவர்களுக்கு, அதன்மூலம் மட்டுமேஅத்தியாவசிய பொருட்கள்வழங்க உரிய நடவடிக்கைமேற்கொண்டு அதன்விவரத்தை தெரிவிக்கவேண்டும் என அந்தசுற்றறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளது

எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., கவுன்சிலிங் : மாநில பாடத்திட்டத்தில் படித்த 3,112 பேருக்கு இடம்


எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மாணவர் சேர்க்கையில், 3,112 இடங்கள், மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு கிடைத்துள்ளதாக,தமிழக அரசு தெரிவித்துள்ளது.இது குறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
தமிழகத்தில், மருத்துவ மாணவர் சேர்க்கை வெளிப்படையாகவும், ஒளிவு மறைவின்றியும், சென்னை, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் நடக்கிறது. ஒதுக்கீடுஅரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில் உள்ளஅரசு ஒதுக்கீடு இடங்கள், அகில இந்திய கவுன்சிலிங்கில் நிரம்பாத இடங்கள் என, 3,532 இடங்கள் உள்ளன. அதேபோல், பல் மருத்துவம் எனப்படும், பி.டி.எஸ்., படிப்பில், 1,201 இடங்கள் உள்ளன.இவற்றில், ஒதுக்கீடு செய்யப்பட்ட, 4,546 எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்களில், 3,112 இடங்கள், மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் பெற்றுள்ளனர்; 1,,434 இடங்கள், சி.பி.எஸ்.இ., மற்றும் இதர பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.சமூக ஊடகங்களில், பிற மாநில மாணவர்கள் மற்றும் இரட்டைபூர்வீக சான்றிதழ் பெற்றுள்ளவர்களுக்கு, அதிக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக, செய்திகள் பரவி வருகின்றன.

ஜூலை, 30 வரை நடந்த கவுன்சிலிங்கில், தமிழகத்தைச் சேர்ந்த, 4,090 மாணவர்களுக்கு, இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன.மேலும், தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட, 428 வெளிமாநில மாணவர்கள்; பிற மாநிலத்தைச் சேர்ந்த, 8 - 12 வகுப்பு வரை, தமிழகத்தில் ஐந்தாண்டுகள் படித்த, 28 மாணவர்கள் என, மொத்தம், 4,546 பேருக்கு, இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.உறுதிமொழிமேலும், இருப்பிட சான்றிதழ் மற்றும் இதர குறைகள் குறித்து ஆராய, குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் இருப்பிட சான்றிதழ் பெறவில்லை என, மாணவர்களிடம் உறுதிமொழி சான்றிதழ் வாங்குகிறோம். மாணவர்கள் வழங்கிய சான்றிதழ் அனைத்தும், மாவட்ட கலெக்டர்களால், அவற்றின் உண்மை தன்மை சரிபார்க்கப்படும்.

இரட்டை சான்றிதழ்களை தடுக்கும் வகையில், மாணவர்கள் படித்த மாநிலத்தின் தேர்வு குழுவுக்கு அனுப்பி, அம்மாநிலத்தில் மருத்துவ இடங்கள் பெற்றுள்ளனரா என்பது கண்டறியப்படும்.விதிகளை மீறி நடந்திஇருந்தால், மாணவர்களின் சேர்க்கைரத்து செய்யப்பட்டு, மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., கவுன்சிலிங் : மாநில பாடத்திட்டத்தில் படித்த 3,112 பேருக்கு இடம்


எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மாணவர் சேர்க்கையில், 3,112 இடங்கள், மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு கிடைத்துள்ளதாக,தமிழக அரசு தெரிவித்துள்ளது.இது குறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
தமிழகத்தில், மருத்துவ மாணவர் சேர்க்கை வெளிப்படையாகவும், ஒளிவு மறைவின்றியும், சென்னை, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் நடக்கிறது. ஒதுக்கீடுஅரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில் உள்ளஅரசு ஒதுக்கீடு இடங்கள், அகில இந்திய கவுன்சிலிங்கில் நிரம்பாத இடங்கள் என, 3,532 இடங்கள் உள்ளன. அதேபோல், பல் மருத்துவம் எனப்படும், பி.டி.எஸ்., படிப்பில், 1,201 இடங்கள் உள்ளன.இவற்றில், ஒதுக்கீடு செய்யப்பட்ட, 4,546 எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்களில், 3,112 இடங்கள், மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் பெற்றுள்ளனர்; 1,,434 இடங்கள், சி.பி.எஸ்.இ., மற்றும் இதர பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.சமூக ஊடகங்களில், பிற மாநில மாணவர்கள் மற்றும் இரட்டைபூர்வீக சான்றிதழ் பெற்றுள்ளவர்களுக்கு, அதிக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக, செய்திகள் பரவி வருகின்றன.

ஜூலை, 30 வரை நடந்த கவுன்சிலிங்கில், தமிழகத்தைச் சேர்ந்த, 4,090 மாணவர்களுக்கு, இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன.மேலும், தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட, 428 வெளிமாநில மாணவர்கள்; பிற மாநிலத்தைச் சேர்ந்த, 8 - 12 வகுப்பு வரை, தமிழகத்தில் ஐந்தாண்டுகள் படித்த, 28 மாணவர்கள் என, மொத்தம், 4,546 பேருக்கு, இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.உறுதிமொழிமேலும், இருப்பிட சான்றிதழ் மற்றும் இதர குறைகள் குறித்து ஆராய, குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் இருப்பிட சான்றிதழ் பெறவில்லை என, மாணவர்களிடம் உறுதிமொழி சான்றிதழ் வாங்குகிறோம். மாணவர்கள் வழங்கிய சான்றிதழ் அனைத்தும், மாவட்ட கலெக்டர்களால், அவற்றின் உண்மை தன்மை சரிபார்க்கப்படும்.

இரட்டை சான்றிதழ்களை தடுக்கும் வகையில், மாணவர்கள் படித்த மாநிலத்தின் தேர்வு குழுவுக்கு அனுப்பி, அம்மாநிலத்தில் மருத்துவ இடங்கள் பெற்றுள்ளனரா என்பது கண்டறியப்படும்.விதிகளை மீறி நடந்திஇருந்தால், மாணவர்களின் சேர்க்கைரத்து செய்யப்பட்டு, மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

காலாண்டு தேர்வு நடக்குமா? : மாணவர்கள் குழப்பம்


ஆசிரியர்கள், செப்., ௭ முதல், தொடர் வேலை நிறுத்தம் செய்ய உள்ளதால், காலாண்டு தேர்வு நடக்குமா என, மாணவர்கள் குழப்பமடைந்துஉள்ளனர். அரசு பள்ளி ஆசிரியர் சங்கங்கள் மற்றும் அரசு ஊழியர் சங்கங்கள் இணைந்து, 'ஜாக்டோ - ஜியோ' கூட்டமைப்பை உருவாக்கி உள்ளன.
இந்த அமைப்பின் சார்பில், தொடர் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது; பழைய, 'பென்ஷன்' திட்டத்தை அனைவருக்கும் அமல்படுத்துவது; ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, மாத ஊதியத்தை உயர்த்துவது என, பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு உள்ளன.

முதற்கட்டமாக, மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம், கோட்டை நோக்கி பேரணி மற்றும் வேலை நிறுத்தம் ஆகிய போராட்டங்கள் நடந்தன. ஆனாலும், அரசு பேச்சு நடத்தாததால், வரும், ௭ முதல், காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், அரசு பள்ளி ஆசிரியர்களில், பெரும்பாலானோர் பள்ளிக்கு வர வாய்ப்பில்லை என்பதால்,பள்ளிகள் திறந்திருந்தாலும், வகுப்புகள் நடக்காது.இந்நிலையில், வரும், 11 முதல், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வுக்கு, காலாண்டு தேர்வு நடக்கும் என,அறிவிக்கப்பட்டு உள்ளது. தேர்வுக்கு நான்கு நாட்களுக்கு முன், ஆசிரியர்கள் போராட்டம் துவங்கு வதால், தேர்வுக்கான பாடங்களை முழுமையாக நடத்தி முடிக்க முடியாத நிலை உள்ளது. போராட்டம், 11ம் தேதிக்கு பின்னும் நீடித்தால், காலாண்டு தேர்வை திட்டமிட்டபடி நடத்த முடியாத சூழல் ஏற்படும். எனவே, தேர்வு திட்டமிட்டபடி நடக்குமா என, மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

பான் எண்ணுடன் ஆதார் இணைப்பு... டிசம்பர் 31 வரை கெடு நீட்டிப்பு!


பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கெடு, டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

Wednesday, 30 August 2017

பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு தனித் தேர்வர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம்


தமிழகத்தில், வரும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கு தனித் தேர்வர்கள் வெள்ளிக்கிழமை (செப்.1) முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.
தனித் தேர்வர்கள் தங்களது விண்ணப்பங்களை www.dge.tn. gov.in  என்ற இணையதளத்தில் வெளியிடப் பட்டு, கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத்தேர்வு சேவை மையங்களுக்குச் சென்று வெள்ளிக்கிழமை (செப்.1) முதல் வியாழக்கிழமை (செப்.7) மாலை 5.45 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
தகுந்த இணைப்புகளுடன் பெறப்படாத விண்ணப்பங்கள் மற்றும் தபால் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் எந்தவித முன்னறிவிப்புமின்றி கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.
சிறப்பு அனுமதித் திட்டம்: மேற்குறிப்பிட்ட தேதிகளில் விண்ணப்பிக்கத் தவறும் தேர்வர்கள் சிறப்பு அனுமதித் திட்டத்தில் செப்.11, 12 ஆகிய இரு தேதிகளில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் அனைத்து தனித் தேர்வர்களுக்கும் திருநெல்வேலி, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், கடலூர், வேலூர் மற்றும் சென்னை ஆகிய மண்டல அலுவலகங்களின் தலைமையிடத்தில் மட்டுமே தேர்வு மையம் அமைக்கப்படும்.
தேர்வுக் கட்டணம்: தேர்வுக் கட்டணம் ரூ.125. இவற்றுடன் கூடுதலாக சிறப்பு அனுமதிக் கட்டணமாக ரூ.500 மற்றும் ஆன்லைன் பதிவுக் கட்டணமாக ரூ.50 என மொத்தம் ரூ.675 பணமாக மட்டுமே அரசுத் தேர்வு சேவை மையத்தில் செலுத்த வேண்டும்.
மேலும், தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் வரை தனித் தேர்வர்களுக்கு தேர்வெழுத வழங்கப்படும் அனுமதி தாற்காலிகமானது தான் எனவும் தனித் தேர்வர்களின் விண்ணப்பம் மற்றும் தகுதி குறித்து ஆய்வு செய்யப்பட்ட பின்னரே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்படுகிறது என அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது

EMIS introduction video

EMIS introduction video part-1

EMIS introduction video part-1http://youtu.be/VyrWB_zmpaM

தேசிய திறனாய்வு தேர்வு: விண்ணப்பிக்க நாளை கடைசி!!



கல்வி உதவித்தொகை பெறுவதற்கான, தேசிய திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்க
, நாளை கடைசி நாள். நாடு முழுவதும், 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, மத்திய அரசு சார்பில், தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்படும். மாநில அளவிலான தேர்வில், தேர்ச்சி பெறுவோருக்கு, தேசிய அளவில் தேர்வு நடக்கும்.

இந்த தேர்வில், தேர்ச்சி பெறும் முதல், 1,000 பேருக்கு, ஆராய்ச்சி படிப்பு வரை உதவித்தொகை வழங்கப்படும். இந்த ஆண்டுக்கான தேர்வு, மாநில அளவில், நவம்பர் முதல் வாரம் நடக்கிறது. இதில், பங்கேற்க விரும்பும் மாணவர்கள், தங்கள் பள்ளி தலைமை ஆசிரியர்கள் வழியே விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை, www.dge.tn.gov.in என்ற, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்ப பதிவு, ஆகஸ்ட், 21ல் துவங்கியது. நாளைக்குள், பள்ளி தலைமை ஆசிரியர்களிடம், மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப தகவல்களை, செப்., 4 முதல், 13க்குள், ஆன் - லைனில், தலைமை ஆசிரியர்கள் பதிவு செய்ய வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.

பிளஸ் 2 மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்



பிளஸ் 1க்கு பொது தேர்வு அறிவிக்கப்பட்டதால், பிளஸ் 2 மாணவர்களுக்கு, புதிய கட்டுப்பாடுகள்
அமலுக்கு வந்துள்ளன. தமிழக பாடத்திட்டத்தில் படிக்கும், பிளஸ் 1 மாணவர்களுக்கு, இந்த ஆண்டு முதல், பொது தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது; மதிப்பெண் முறையும் மாற்றப்பட்டுள்ளது.

இதன்படி, அடுத்த ஆண்டுக்கான, பிளஸ் 2 தேர்வும் மாற்றப்பட உள்ளது. அதனால், பழைய முறையில், தற்போது, பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு, புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. இதுகுறித்து, தேர்வுத்துறை இயக்குனரகத்தின் கருத்துருவுக்கு, பள்ளிக் கல்வித்துறை அனுமதி அளித்து, அரசாணை பிறப்பித்துள்ளது.

அதன்படி, தற்போது பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், வரும், மார்ச் பொது தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால், அவர்கள், அக்டோபர் மாதம் நடைபெறும் துணைத் தேர்வு மற்றும் 2019 மார்ச்சில் நடக்கும் பொது தேர்வுகளில் பங்கேற்க முடியும். அதற்கு பிறகும் தேர்ச்சி பெறாவிட்டால், தேர்வில் பங்கேற்க முடியாது.

எனவே, தற்போது, பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், 2019 மார்ச்சுக்குள், அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பிளஸ் 2வில், தனித் தேர்வர்களாக எழுத விரும்புவோர்; 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று, இரண்டு ஆண்டு பூர்த்தியானவர், இந்த ஆண்டு அக்டோபர் தேர்வில் பங்கேற்கலாம். 2016 மார்ச்சில், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர், 2018 வரை, தற்போதைய, 1,200 மதிப்பெண் முறைப்படி தனித்தேர்வராக, பிளஸ் 2 தேர்வு எழுதலாம் என, அரசாணையில் கூறப்பட்டுள்ளது

AADHAR-PAN இணைக்க 31/08/2017கடைசி... எஸ்.எம்.எஸ் மூலம் எளிய வழி!!




EXTENSION FOR AADHAR-PAN LINKING : 31.08.2017 IS LAST DATE
பான் எண்ணுடன்
ஆதார் எண்ணை இணைப்பதற்கான கெடு, ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

வருமான வரித்துறை சார்பில் அனைவருக்கும் ‘பான்’ கார்டு எனப்படும் நிரந்தர கணக்கு அட்டை வழங்கப்படுகிறது. வருமான வரி செலுத்துவோர் மட்டுமல்லாது, வரி செலுத்தாதவர்களும் பான் அட்டை பெறலாம். இந்த நிலையில் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது. இதற்கான காலக்கெடு முதலில் ஜூன் 30-ம் தேதி என நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இந்தக் காலக்கெடுவுக்குள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி முழுமை பெறவில்லை. அதேசமயம் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை நேரடி வரிவிதிப்பு கழகமும் நீட்டித்தது.


இதயைடுத்து பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் ஆகஸ்டு 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அந்த காலக்கெடு  நாளையுடன் முடிவடைய உள்ளது. எனவே, இதுவரை பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள், உங்களுடைய மொபைல் போனில் இருந்து எஸ்.எம்.எஸ் மூலம் எளிதாக இணைத்துக் கொள்ளலாம். ஒரு வேளை உங்கள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால், உங்களுடைய வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய முடியாதது மட்டுமல்லாது, அரசின் எந்த ஒரு சமூக நலன் சார்ந்த திட்டங்களின் பலன்களையும் பெற முடியாது.


எஸ்.எம்.எஸ் மூலம் எளிய வழி!


மொபைல் போனில் இருந்து எஸ்.எம்.எஸ் மூலம் இணைக்கும் வசதியை வருமான வரித்துறை அறிமுகம் செய்து இருந்தது. இதன்படி, உங்கள் மொபைல் போனில் UIDPAN என அடித்து, ஒரு எழுத்து இடைவெளி விட்டு, முதலில் ஆதார் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். அதன் பின் ஓர் எழுத்து இடைவெளி விட்டு, பான் எண்ணையும் டைப் செய்ய வேண்டும். அதை 56161 அல்லது 567678 ஆகிய எண்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்பினால் உடனே பான் எண்ணும், ஆதார் எண்ணும் இணைக்கப்பட்டு விடும்.


உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 567678 அல்லது 56161 என்ற முகவரிக்கு SMS அனுப்புங்கள்


UIDPAN<ஒரு எழுத்து இடைவெளி><12 இலக்க ஆதார் எண்><ஒரு எழுத்து இடைவெளி><10 இலக்க பான் எண்>


உதாரணம்: UIDPAN 123456789123 AKPLM2124M

School Management Committee Formation Format


ஆதார்-கெடு நீட்டிப்பு மத்திய அரசு அறிவிப்பு !!


பல்வேறு பயனாளிகளின் திட்டங்களுக்கு ஆதார் எண் இணைப்பிற்கு காலக்கெடு நாளை முடிவடைய இருந்த நிலையில்,
வரும் டிசம்பர் 31 வரை அவகாசம் நீட்டிப்பு-மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தகவல்.

ஆதார் தொடர்பான பல்வேறு வழக்குககளும் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் அனைத்தும் நவம்பர் முதல் வாரத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்தது.

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இவ்வாறு தெரிவித்தது. முதலில், ஆதார் தொடர்பான 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பை வழங்கிய பின்னர் இந்த வழக்குகள் விசாரிக்கப்படும் என நீதிபதிகள் கூறினர். அப்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல், “பல்வேறு சமூக நலத்திட்ட சலுகைகளைப் பெற ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தை வரும் டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்படுகிறது” எனத் தெரிவித்தது.

ஏற்கெனவே, ஆதார் தொடர்பான வழக்கில் அந்தரங்க தகவல்கள் அடிப்படை உரிமை என கடந்த வாரம் 9 நீதிபதிகள் அடங்கிய அமர்வு மத்திய அரசுக்கு எதிராக தீர்ப்பு வழங்கிய நிலையில் ஆதார் இணைப்புக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

இலவச, 'லேப் - டாப்' திட்டம் தமிழகத்தில் மீண்டும் துவக்கம் !!


தமிழகத்தில், நிறுத்தப்பட்டிருந்த இலவச, 'லேப் - டாப்' வழங்கும் திட்டம், மீண்டும் துவக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில், 2011 முதல், அரசு பள்ளிகள் மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் ,
பயிலும், மாணவ மாணவியருக்கு, இலவசமாக 'லேப் -- டாப்' வழங்கப்படுகிறது. 2016 வரை, 40 லட்சம், 'லேப் - டாப்'கள் வழங்கப்பட்டன. கடந்த, 2016ல், இந்த வினியோகம்,திடீரென

நிறுத்தப்பட்ட தால், ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட, மாணவ மாணவியர் ஏமாற்றம் அடைந்தனர். தற்போது, இந்த பணி மீண்டும் துவக்கப்பட்டுஉள்ளது.

இது குறித்து, தகவல் தொழில்நுட்பத் துறை அதிகாரிகள் கூறியதாவது: டெண்டரில் பங்கேற்ற நிறுவனம் ஒன்று, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் ததால், 2016ல், மாணவ மாணவியருக்கு, 'லேப் - டாப்' வழங்க முடியாமல் போனது. தற்போது, அந்த வழக்கு முடிந்துவிட்டது. அதனால், 'லேப் - டாப்' வழங்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு வழங்குவதற்கான, 'லேப் - டாப்' விரைவில் கொள்முதல் செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

பி.எஸ்.எல்.வி சி-39 ராக்கெட் ஏவுவதற்கான 29 மணி நேர கவுண்டவுன் இன்று பிற்பகல் துவங்கியது. நாளை விண்ணில் ஏவப்படுகிறது.



இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் (இஸ்ரோ) சார்பில் 31 ஆம் தேதி பி.எஸ்.எல்.வி.
வரிசையில் சி-39 ராக்கெட் ஏவப்பட உள்ளது. இதில் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1எச் என்ற செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டது. 320 டன் எடையும் 44.4 மீட்டர் உயரமும் கொண்டது.*


*ஏற்கனவே, 7 செயற்கைகோள்களை திட்டமிட்டபடி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இதில் முதலில் செலுத்தப்பட்ட செயற்கைகோளின் ஆயுள் காலம் நிறைவடைய இருப்பதை தொடர்ந்து, புதிதாக 1,425 கிலோ எடை கொண்ட ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-எச் என்ற செயற்கைகோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது.இதனை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-39 ராக்கெட் மூலம் வருகிற 31 ஆம் தேதி (வியாழக்கிழமை) விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதற்கான ஆயத்தப்பணிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.*


*இறுதிகட்ட பணியான 29 மணிநேர கவுண்ட்டவுன்; இன்று (புதன்கிழமை) பகல் 2 மணிக்கு தொடங்கியது. 31 ஆம் தேதி மாலை 7 மணிக்கு நிறைவடைந்தவுடன் ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது.*

*பூமியில் இருந்து குறைந்தபட்சம் 284 கிலோ மீட்டரிலும், அதிகபட்சம் 20 ஆயிரத்து 657 கிலோ மீட்டரிலும் நிலை நிறுத்தப்படுகிறது. இதன் மூலம் இயற்கை சீற்றம், பேரிடர் மேலாண்மை, கடல்சார் செயல்பாடுகளை கண்காணிக்க முடியும்

பான் எண்ணுடன் ஆதார் இணைக்க.இங்கே கொடுக்கவும்.

https://incometaxindiaefiling.gov.in/e-Filing/Services/LinkAadhaarHome.htmlhttps://incometaxindiaefiling.gov.in/e-Filing/Services/LinkAadhaarHome.html

Tuesday, 29 August 2017

பிளஸ் 2 சிறப்பு துணைத்தேர்வு: இன்று முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்


பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு புதன்கிழமை (ஆக.30) முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ், ஒருங்கிணைக்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழ் ஆகியவை வழங்கப்படவுள்ளன. 
இதுகுறித்து அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:
கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வெழுதிய மாணவர்களுக்கு ஜூலை 25-ஆம் தேதி முதல் தாற்காலிக மதிப்பெண் சான்றிதழை தேர்வர்களே ஆன்-லைன் மூலம் பதிவிறக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. 
நிரந்தர பதிவெண் வழங்கப்பட்ட தேர்வர்கள், அவர்கள் தேர்ச்சி பெறாத பாடங்களை ஜுன், ஜுலை மாதங்களில் நடைபெற்ற சிறப்புத் துணைத் தேர்வில் தேர்வெழுதி அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருப்பின் ஒருங்கிணைக்கப்பட்ட அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். 
இதர தேர்வர்களுக்கு ஜுன், ஜுலை மாதங்களில் தேர்வெழுதிய பாடங்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் (மறுகூட்டல், மறு மதிப்பீடு உள்பட) வழங்கப்படும். இந்தச் சான்றிதழை புதன்கிழமை (ஆக.30) முதல் தேர்வர்கள் தேர்வெழுதிய மையத்திலேயே பெற்றுக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

புகழ் இழந்தால் என்ன நடக்கும் ? இந்த செய்தியை படிக்கவும்.

புகழ் இழந்தால் என்ன நடக்கும் ? தன்னுடைய வெண்கலச் சிலைக்கு முன் உறங்கிய புகழ்பெற்ற ஹாலிவுட் ஹீரோ (Arnold Schwarzenegger)அர்னால்டின் பரிதாப...