Wednesday, 23 August 2017

Flash News:சுப்ரீம் கோர்ட் அதிரடி.. இனி செல்போனுக்கும், ரேஷன் கார்டுக்கும் ஆதார் எண் கேட்டால் தப்பு!


People are happy with Aadhar verdict

ஏற்கனவே பல்வேறு திட்டங்களுக்காக கட்டாயப்படுத்தி ஆதார் எண்ணை வாங்கியது செல்லுபடியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் ரேஷன் அட்டைகளுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி கட்டாயப்படுத்தி நடந்து வருகிறது. ஆதார் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பையடுத்து ரேஷன் கார்டுகளுடன் ஆதார் அட்டையை இணைக்க கட்டாயப்படுத்துவது என்பது முடியாததாகிவிடும்.

இதேபோல செல்போன் சிம்கார்டுகள் வாங்குவதற்கு ஆதார் அடையாள அட்டை அவசியம் என்று ஜியோ நிறுவனம் கூறியிருந்தது. அந்த அடிப்படையில்தான் சிம்கார்டுகளை கொடுத்தது.
பல்வேறு செல்போன் நிறுவனங்களும் இப்போது அதை ஃபாலோ செய்கின்றன. இனிமேல் அதை கட்டாயப்படுத்துவது தவறாகிவிடும். ஏனெனில் ஆதார் அட்டை என்பது ஒரு அடையாள அட்டையாக பார்க்கப்படுகிறது. அதை விரும்பியோர் பெறலாம் அவர்களை கட்டாயப்படுத்த கூடாது என்பது தீர்ப்பின் சாராம்சம்.
சமீபத்தில் மத்திய அரசு பிறப்பித்த உத்தரவில் இறந்தவர்களை நல்லடக்கம் செய்யும்போது கூட ஆதார் எண் கொடுக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இது தவிர்க்கப்பட்டும்.
ஆதார் அட்டை இல்லாதவர்கள் அரசு சலுகை பறிபோய்விடுமோ என்ற அச்சம் இனி மக்களுக்கு தேவையில்லை.

No comments:

Post a Comment

புகழ் இழந்தால் என்ன நடக்கும் ? இந்த செய்தியை படிக்கவும்.

புகழ் இழந்தால் என்ன நடக்கும் ? தன்னுடைய வெண்கலச் சிலைக்கு முன் உறங்கிய புகழ்பெற்ற ஹாலிவுட் ஹீரோ (Arnold Schwarzenegger)அர்னால்டின் பரிதாப...