Thursday, 24 August 2017

பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு: மறுகூட்டல் முடிவுகள் நாளை வெளியீடு


பிளஸ் 2 சிறப்புத் தேர்வு எழுதியவர்களின் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் சனிக்கிழமை (ஆக.26) வெளியிடப்படவுள்ளது.
இது குறித்து அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:-
தமிழகத்தில் கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெற்ற பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வை 51,144 மாணவர்கள் எழுதினர். இதில் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்த தேர்வர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ள மாணவர்களின் பட்டியல் scan.tndge.in என்ற இணையதளத்தில் சனிக்கிழமை (ஆக.26) வெளியிடப்படவுள்ளது. இந்தப் பட்டியலில் இல்லாத மாணவர்களுக்கான விடைத்தாள்களில் எந்தவித மதிப்பெண் மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது

No comments:

Post a Comment

புகழ் இழந்தால் என்ன நடக்கும் ? இந்த செய்தியை படிக்கவும்.

புகழ் இழந்தால் என்ன நடக்கும் ? தன்னுடைய வெண்கலச் சிலைக்கு முன் உறங்கிய புகழ்பெற்ற ஹாலிவுட் ஹீரோ (Arnold Schwarzenegger)அர்னால்டின் பரிதாப...