கடந்த மூன்று மாதங்களாகப்பள்ளி கல்வித்துறைசெயலாளருக்கும், கல்வித்துறை அமைச்சர்செங்கோட்டையனுக்கும்இடையே பனிப்போர் நீடித்தது.உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ்அதிகாரியை இடம் மாற்றம்செய்து, அவரது அதிகாரத்தைக்குறைத்ததன் மூலம்பள்ளிக்கல்விதுறை அமைச்சர்
செங்கோட்டையன்ஜெயித்துவிட்டார். ஆனால்,உதயச்சந்திரன் ஆரம்பித்துவைத்த கல்வித்துறையின்சீர்திருத்தங்கள்தொடக்கநிலையிலேயேஇருக்கின்றன. இனிசீர்திருத்தங்கள் நடக்குமா?பள்ளிக்கல்வியில் மாற்றங்கள்நடக்குமா? மாணவர்களின்எதிர்காலம் என்னவாகும் என்றகேள்வி எழுந்திருக்கிறது.
ஆரம்பத்தில் ஜெயலலிதாவின்தேர்தல் பணியின்சாரதியாகவும், இரண்டாம்நிலை தலைவராகவும், அதிமுககட்சி தலைமை நிலையசெயலாளராகவும் இருந்துபவர்புல் மனிதராகச்செயல்பட்டு வந்தார்செங்கோட்டையன். 2011-ம்ஆண்டு ஆட்சி ஜெயலலிதாஆட்சி அமைத்த போதுவேளாண்துறை அமைச்சராகப்பதவி ஏற்றார். வேளாண் துறைசரியான பசையில்லாததுறையாக இருக்கிறது என்றுவருத்தப்பட்ட போதுவணிகவரித் துறைஅமைச்சராக மாற்றப்பட்டார்.ஆனால், செங்கோட்டையன் மீதுஅவரது மனைவியும், மகனும்நேரிடையாகஜெயலலிதாவுடன் புகார்தெரிவிக்க, ஆறு மாத காலஅளவில் முழுமையாக மாறி வரவேண்டும் என கண்டித்துஅனுப்பி வைத்தார்ஜெயலலிதா. ஆனால், அவரதுநடவடிக்கையில் எந்தவிதமானமாற்றமும் இல்லை என்றுமீண்டும் ஜெயலலிதாவிடம்புகார் தெரிவிக்க, அமைச்சர்பதவியில் இருந்தும், தலைமைநிலைய செயலாளர் பதவியில்இருந்தும் நீக்கப்பட்டார்செங்கோட்டையன். அதன்பின்புகட்சி பணியில் பெரிய அளவில்தலைகாட்டாமல் இருந்துவந்தார். இந்த நிலையில்,ஜெயலலிதாவின்மரணத்துக்குப் பின்பு, எடப்பாடிபழனிசாமியின்அமைச்சரவையில்பள்ளிக்கல்வித் துறைஅமைச்சர் ஆனார்.
இவர் பதவியேற்றவுடன்தன்னுடைய பெயரைநிலைநிறுத்தும் வகையில்,ஏற்கெனவே தமிழ்நாடு அரசுப்பணியாளர்தேர்வாணையத்தில்மாற்றங்களைக் கொண்டுவந்தபெயர்பெற்ற உதயச்சந்திரன்ஐ.ஏ.எஸ்.,-ஐ பள்ளிகல்வித்துறையின்செயலாளராகக் கொண்டுவந்தார். கடந்த ஆறுமாதங்களாக தமிழ்நாட்டில்மற்ற துறையில் பெரியஅளவில் எந்தவிதமானசெயல்பாடும் இல்லாதபோதுபள்ளி கல்வித்துறையின்சார்பில் பலவிதமானஅறிவிப்புகள் வெளியிடப்பட்டுவெளிச்சம் பாய்ச்சி வந்தார்கள்.பள்ளிக்கல்விதுறையில் பலமாற்றங்களுக்குஉதயச்சந்திரன் பின்னணியில்செயல்பட, மக்களிடையேஅறிவிப்பை வெளியிட்டு தனதுபெயருக்கு பின் உள்ளகளங்கத்தை துடைக்கும்முயற்சியில் வெற்றிபெற்றார்செங்கோட்டையன்.
உதயச்சந்திரன் பள்ளிஆசிரியர்களிடம் பேசும்போது“கோட்டையில் இருந்து இரண்டுகண்கள் உங்களைக்கண்காணித்து வருகின்றன.ஆகையால், உங்களுக்கு எந்தபிரச்னை என்றாலும் என்னிடம்தயங்காமல் தெரிவியுங்கள்”என்று தெரிவித்து இருக்கிறார்.இது ஆசிரியர்களிடையே புதுஉத்வேகத்தைக் கொடுத்தது.உதயச்சந்திரனின்செயல்பாடுகள் பள்ளிஆசிரியர்களைத் தவிர,பொதுமக்களிடையேயும்,எதிர்க்கட்சியினரிடையேயும்பாராட்டைப் பெற்றன. இந்தப்பாராட்டுகள் அமைச்சர்செங்கோட்டையன் மனதில்ஈகோவை உருவாக்கியது.
இதற்கிடையே பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர்கள்இடமாற்றத்தில் சிலவழிமுறைகளைக் கொண்டுவந்தார் உதயச்சந்திரன். இந்தவழிமுறைகளின்அடிப்படையில் மட்டுமேஆசிரியர்களுக்கு இடமாறுதல்வழங்கப்பட்டது. நீண்டகாலமாகபணம் கைமாறுதல் மூலம்ஆசிரியர் இடமாறுதல் நிகழ்ந்துவந்தது. இதில் பெருந்தொகைகைமாறி எல்லாம் மட்டத்திலும்பாய்ந்து வந்தது.உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ்.கல்வித்துறைக்கு வந்தபின்புபணம் பாய்ச்சலில் தடைஏற்பட்டது. கிடைத்தவரை லாபம்என்கிற நிலையில் தடையாகஉள்ள உதயச்சந்திரனைதுறையை மாற்றிட முடிவில்என்ற முனைப்பில் இருந்தார்கல்வித்துறை அமைச்சர்செங்கோட்டையன்.
உதயச்சந்திரனை இரவோடுஇரவாகத் துறையை மாற்றிவிடலாம் என்று இட மாற்றக்கடிதத்தை தயார் செய்ய, இந்தவிஷயம் கல்வித்துறையில்உள்ள இதர அதிகாரிகளுக்குத்தெரியவந்திருக்கிறது.இவர்கள் உடனே அமைச்சரைச்சந்தித்து உதயச்சந்திரனைஇடம் மாற்றம் செய்யவேண்டாம் என்று கோரிக்கைவைத்திருக்கிறார்கள்.இதனால் இடமாற்றக் கடிதம்தயாராகியும் கிடப்பில்போடப்பட்டது. இந்த விஷயம்வெளியே கசிந்தவுடன்உதயச்சந்திரன் இடமாற்றம்செய்யக்கூடாது என்றுஅறிக்கை வெளியிட்டார்அன்புமணி ராமதாஸ். கூடவே,இரண்டு முறைசெங்கோட்டையனைகல்வித்துறை மாற்றங்கள்குறித்து விவாதிக்கபொதுமேடைக்கு அழைப்புவிடுத்தார்.
காஞ்சிபுரம் ராமலிங்கம்‘உயர்நீதிமன்றத்தில்பாடத்திட்டத்தை மாற்றிஅமைக்கும் பணி நடந்துவருகிறது. இந்தப் பணியினைமேற்கொள்ளும் வரை இந்தக்குழுவில் இருந்து யாரையும்இடமாற்றம் செய்யக்கூடாதுஎன்று உத்தரவிட வேண்டும்’என்று வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில்‘பாடத்திட்டங்கள் வடிவமைக்கும்குழுவில் இருந்து யாரையும்மாற்றம் செய்யக்கூடாது’ என்றுதீர்ப்பு வழங்கப்பட்டது. இந்தத்தீர்ப்பில் பாடத்திட்டங்களைவடிவமைக்கும் குழுவில்யாரையும் மாற்றிஅமைக்கக்கூடாது என்ற தீர்ப்புஅமைச்சருக்குத் சாதகமாய்அமைந்துவிட்டது. அந்தக்குழுவின் செயலாளராகஉதயச்சந்திரனைநியமித்துவிட்டு பள்ளிக்கல்விசெயலாளர் பதவியில் மாற்றிஇருக்கிறார்கள்.
கடந்த வாரம் பள்ளிக்கல்விதுறை சார்பில் பதினொன்றாம்வகுப்புக்கான மாதிரிவினாத்தாள் வெளியிட்டுநிகழ்ச்சியில் கலந்துகொண்டஅமைச்சர்செங்கோட்டையனிடம்உதயச்சந்திரன் குறித்துகேள்விகேட்டபோது உடனேநிகழ்ச்சியில் இருந்துவெளியேறி விட்டார்செங்கோட்டையன்.அந்தளவுக்கு வெறுப்பில்இருந்தவர் தகுந்தநேரத்துக்காகக்காத்துக்கொண்டிருந்திருக்கிறார்.
மூன்றுநாள்கள் விடுமுறைவருவதை முன்னிட்டு நள்ளிரவுநேரத்தில்அதிகாரகுறைப்புக்கானஆணையைப் பிறப்பித்துஇருக்கிறார்கள். இதன்மூலம்உச்சநீதிமன்றத்தை நாடவும்முடியாது. ஆசிரியர்கள்போராடவும் முடியாது. அமைச்சர்திட்டத்தை அறிவிப்பது எளிது.ஆனால், அதைச்செயல்படுத்தக்கூடியசெயலாளர் இருக்க வேண்டும்.ஆனால் உதயச்சந்திரன்தலைமை அதிகாரியாகஇருந்தவரைப் பாடத்திட்டங்கள்வடிமைப்புக்கு என்றுஎந்தவிதமான நிதியையும்,அதிகாரத்தையும் கையாளமுடியாத அதிகாரி நிலையானபணியை வழங்கி இருக்கிறார்செங்கோட்டையன்.
இரண்டு பேருக்கும் இடையேஉள்ள ஈகோ யுத்தத்தில்செங்கோட்டையன் ஜெயித்துஇருக்கிறார். மாற்றமேஇல்லாமல் இருந்த பழையநிலைக்கே திரும்புகிறதுகல்வித்துறை. தற்போதுவிரக்தி நிலையில் இருக்கும்உதயச்சந்திரன் விடுமுறைக்குச்செல்ல விரும்புவதாகதலைமைச் செயலகஅதிகாரிகள் தகவல் தெரிந்துஇருக்கிறார்கள்.
No comments:
Post a Comment