Thursday, 17 August 2017

எந்த திசையில் தலைவைத்து தூங்கினால் ஆரோக்கியமாக வாழலாம் தெரியுமா?

மனிதர்களின் பாதி வாழ்க்கை தூக்கத்தில் தான் கழிகிறது. ஒரே ஒரு நாள் சரியாக தூங்கவில்லை என்றாலும் இரண்டு மூன்று நாட்களுக்கு எந்த வேலையும் சரியாக செய்யமுடியாது. அந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் தூக்கத்தின் போது ஒரு மனிதன் எந்த திசையில் தலைவைத்து படுத்தால் சிறந்தது என்பதை ஆன்மீக ரீதியாகவும் விஞ்ஞான ரீதியாகவும் ஆராய்வோம் வாருங்கள்.
கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது.
மேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் கனவுகளும், அதிச்சியும் உண்டாகும்.
தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும்.
வடக்கு திசையில் ஒரு போதும் தலை வைத்துப் படுத்து தூங்கக்கூடாது.
விஞ்ஞான ரீதியான காரணங்கள்:
வடக்கு திசையில் இருந்து வரும் காந்தசக்தி தலையில் மோதும் போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும். இதனால் மூளை பாதிக்கப் படுவதுடன், இதயக் கோளாறுகள், நரம்புத்தளர்ச்சி உண்டாகும்.
மல்லாந்தும், குப்புறப்படுத்து தூங்கக்கூடாது. மாறாக வலக்கை மேலாகவும், இடக்கை கீழாகவும் இருக்கும்படி கால்களை நீட்டி இடது பக்கமாக ஒருக்களித்து படுத்து தூங்கவேண்டும்.
இதனால் வலது மூக்கில் சுவாசம் சூரியகலையில் ஓடும். இதனால் உடலுக்குத் தேவையான வெப்பக்காற்று அதிகரிப்பதோடு உண்ட உணவு எளிதில் ஜீரணமாகும்.
அதோடு இதயத்திற்கு தேவையான பிராணவாயு சீராக கிடைக்கும். இதனால் ஆயுள் நீடிக்கும். மாறாக வலது பக்கமாக ஒருக்களித்து படுப்பதால் ஜீரணக்கோளாறு ஏற்படும். இதனால் வயிறு சம்மந்தமான பிரச்சனைகள் வரும்.

No comments:

Post a Comment

புகழ் இழந்தால் என்ன நடக்கும் ? இந்த செய்தியை படிக்கவும்.

புகழ் இழந்தால் என்ன நடக்கும் ? தன்னுடைய வெண்கலச் சிலைக்கு முன் உறங்கிய புகழ்பெற்ற ஹாலிவுட் ஹீரோ (Arnold Schwarzenegger)அர்னால்டின் பரிதாப...