Monday, 2 October 2017

காலாண்டு தேர்வு முடிவுகள் வரும் 4ல் சமர்பிக்க உத்தரவு


காலாண்டு தேர்வு விடுமுறைக்குப் பின், நாளை (அக். 3 ம் தேதி), பள்ளிகள் திறக்கின்றன. விடுமுறை நாளில், மதிப்பீட்டு பணிகள் முடித்து, அந்தந்த பாடவேளையில், விடைத்தாள் விநியோகிக்க, ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சிலர் கூறுகையில்,’பத்தாம் வகுப்பு காலாண்டு தேர்வு முடிவை, மாவட்ட கல்வி அலுவலகத்திலும், பிளஸ் 1, பிளஸ் 2 முடிவுகளை, முதன்மை கல்வி அலுவலகத்திலும் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
’தோல்வியை தழுவிய மாணவர்களுக்கு, மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும். வாரத்தேர்வுகள் நடத்தி, அரையாண்டு தேர்வுக்குள், கற்றல் திறன் மேம்படுத்த வழிவகை செய்யப்படும்’ என்றனர்.

No comments:

Post a Comment

புகழ் இழந்தால் என்ன நடக்கும் ? இந்த செய்தியை படிக்கவும்.

புகழ் இழந்தால் என்ன நடக்கும் ? தன்னுடைய வெண்கலச் சிலைக்கு முன் உறங்கிய புகழ்பெற்ற ஹாலிவுட் ஹீரோ (Arnold Schwarzenegger)அர்னால்டின் பரிதாப...