: அரசு அலுவலகங்களில் அமர்ந்து, நிர்வாக விஷயங்களை கவனித்து வரும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு, பட்டப்படிப்பு கல்வித்துறை, ’ஷாக்’ கொடுத்துள்ளது.
அலுவலக பணிகளுடன், வாரத்துக்கு ஆறு மணி நேரம், அருகிலுள்ள கல்லூரிக்குச் சென்று பாடம் நடத்துவதை கட்டாயமாக்கி, அந்த துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கல்வித்துறை அதிகாரிகள், அரசு அலுவலகங்களில் அமர்ந்து, ராஜாங்கம் நடத்தி பழக்கப்பட்டவர்கள். 10 - 15 ஆண்டுகள், ஆசிரியர்களாக பணியாற்றிய பின், அந்த தொழிலுக்கு முழுக்கு போட்டு, அரசு பணிக்கு வந்த பல அதிகாரிகள், கற்பிக்கும் திறனை இழந்துள்ளனர்.
தற்போது அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பட்டப்படிப்பு கல்லுாரிகளில் பேராசிரியர் பற்றாக்குறை உள்ளது. இதற்கு தீர்வு காண்பதுடன், அதிகாரிகளின் திறனை மேம்படுத்தும் எண்ணத்தில், பட்டப்படிப்பு கல்வித்துறை, புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.இதன் படி, பட்டப்படிப்பு கல்வித்துறை சார்ந்த அலுவலகங்களில் பணியாற்றும் அதிகாரிகள், ஆசிரியர்களாகவும் பணியாற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் அலுவலக பணிகளுடன், வாரத்துக்கு ஆறு மணி நேரம், அருகிலுள்ள அரசு அல்லது அரசு நிதியுதவி பெறும், பட்டப்படிப்பு கல்லுாரிக்கு சென்று, மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டும்.எந்த பாடத்தை கற்றுக் கொடுப்பது என்பதை, தாங்களே முடிவு செய்து கொள்ள, அதிகாரிகளுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை அலட்சியம் செய்யக்கூடாது. அதே நேரத்தில், மாணவர்களுக்கு பாடம் நடத்த செல்வதாக கூறி, நேரத்தை வீணடிக்க கூடாது என்றும் அறிவுறுத்தி, சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.பட்டப்படிப்பு கல்வித்துறையின், உத்தரவு அதிகாரிகளை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
பெங்களூரு, மைசூரு, மங்களூரு, ஷிவமொகா, தார்வாட், கலபுரகியின் இணை இயக்குனர்கள், தங்கள் பகுதியில் பணியாற்றும் சிறப்பு அதிகாரிகள், ஒருங்கிணைப்பு அதிகாரிகள், நோடல் அதிகாரிகளை, கல்லுாரி பேராசியர்களாக நியமிக்கும்படி உத்தரவிட்டுள்ளனர்.அதிகாரிகளில் பலருக்கு, கற்பிக்கும் திறன் இருக்காது.
இப்படிப்பட்டவர்களை, மாணவர்களுக்கு பாடம் நடத்த அனுப்பினால், அவர்களின் கல்வித்திறன் பாதிக்கப்படும் என்ற எதிர்ப்பும் எழுந்துள்ளது. இதே வேளையில், மாணவர்களுக்கு பாடம் நடத்த, சில அதிகாரிகள், ஆர்வமாக முன் வந்துள்ளனர்
அலுவலக பணிகளுடன், வாரத்துக்கு ஆறு மணி நேரம், அருகிலுள்ள கல்லூரிக்குச் சென்று பாடம் நடத்துவதை கட்டாயமாக்கி, அந்த துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கல்வித்துறை அதிகாரிகள், அரசு அலுவலகங்களில் அமர்ந்து, ராஜாங்கம் நடத்தி பழக்கப்பட்டவர்கள். 10 - 15 ஆண்டுகள், ஆசிரியர்களாக பணியாற்றிய பின், அந்த தொழிலுக்கு முழுக்கு போட்டு, அரசு பணிக்கு வந்த பல அதிகாரிகள், கற்பிக்கும் திறனை இழந்துள்ளனர்.
தற்போது அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பட்டப்படிப்பு கல்லுாரிகளில் பேராசிரியர் பற்றாக்குறை உள்ளது. இதற்கு தீர்வு காண்பதுடன், அதிகாரிகளின் திறனை மேம்படுத்தும் எண்ணத்தில், பட்டப்படிப்பு கல்வித்துறை, புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.இதன் படி, பட்டப்படிப்பு கல்வித்துறை சார்ந்த அலுவலகங்களில் பணியாற்றும் அதிகாரிகள், ஆசிரியர்களாகவும் பணியாற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் அலுவலக பணிகளுடன், வாரத்துக்கு ஆறு மணி நேரம், அருகிலுள்ள அரசு அல்லது அரசு நிதியுதவி பெறும், பட்டப்படிப்பு கல்லுாரிக்கு சென்று, மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டும்.எந்த பாடத்தை கற்றுக் கொடுப்பது என்பதை, தாங்களே முடிவு செய்து கொள்ள, அதிகாரிகளுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை அலட்சியம் செய்யக்கூடாது. அதே நேரத்தில், மாணவர்களுக்கு பாடம் நடத்த செல்வதாக கூறி, நேரத்தை வீணடிக்க கூடாது என்றும் அறிவுறுத்தி, சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.பட்டப்படிப்பு கல்வித்துறையின், உத்தரவு அதிகாரிகளை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
பெங்களூரு, மைசூரு, மங்களூரு, ஷிவமொகா, தார்வாட், கலபுரகியின் இணை இயக்குனர்கள், தங்கள் பகுதியில் பணியாற்றும் சிறப்பு அதிகாரிகள், ஒருங்கிணைப்பு அதிகாரிகள், நோடல் அதிகாரிகளை, கல்லுாரி பேராசியர்களாக நியமிக்கும்படி உத்தரவிட்டுள்ளனர்.அதிகாரிகளில் பலருக்கு, கற்பிக்கும் திறன் இருக்காது.
இப்படிப்பட்டவர்களை, மாணவர்களுக்கு பாடம் நடத்த அனுப்பினால், அவர்களின் கல்வித்திறன் பாதிக்கப்படும் என்ற எதிர்ப்பும் எழுந்துள்ளது. இதே வேளையில், மாணவர்களுக்கு பாடம் நடத்த, சில அதிகாரிகள், ஆர்வமாக முன் வந்துள்ளனர்
No comments:
Post a Comment