Monday, 2 October 2017

விருதுக்கு தகுதியான மாணவர் யார்? பட்டியல் அனுப்ப உத்தரவு


பள்ளிக்கல்வித்துறை சார்பில், கல்வி மட்டுமல்லாமல், கலை, இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட இணை செயல்பாடுகளில் ஆர்வமுள்ள மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், காமராஜர் விருது வழங்க, சமீபத்தில் அறிவிப்பு வெளியானது.
அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில், தமிழ் வழியில் படிக்கும், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு, இவ்விருது வழங்கப்படும். ஆண்டு இறுதித்தேர்வில், 60 சதவீத மதிப்பெண்கள் கொண்டவர்கள், தகுதியானவர்களாவர்.
இவர்கள், கலை இலக்கிய போட்டிகள், விளையாட்டு, மன்ற நிகழ்வுகளில் பங்கேற்று, மாவட்ட, மாநில, தேசிய அளவில், பரிசு பெற்றவர்களாக இருத்தல் அவசியம். இதர செயல்பாடுகள் பிரிவுக்கு, 40 மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இதில், போட்டிகளில் பங்கேற்ற சான்றிதழ்கள் கொண்டு, மதிப்பெண்கள் பிரித்தளிக்கப்படுகின்றன.
அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் இருந்தும், அதிகபட்சம் மூன்று மாணவர்கள் வரை பரிந்துரைக்கலாம். மாவட்ட தேர்வுக்குழுவானது, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வில், தலா 20 மாணவர்களின் பெயர்களை, இயக்குனரகத்திற்கு அனுப்பி வைக்கும். மாநில தேர்வுக்குழு, மதிப்பெண்கள் அடிப்படையில், மாவட்டத்திற்கு தலா 30 மாணவர்களுக்கு இவ்விருது வழங்குகிறது. இதற்கான பணிகள் மும்முரமாக நடக்கின்றன.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷமூர்த்தி கூறுகையில், ”பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவுறுத்தல் படி, மாவட்ட தேர்வுக்குழு அமைக்கப்படும். இதற்கு, தகுதியானோர் பட்டியல் அனுப்புமாறு, தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்புக்கு, தலா 10 ஆயிரமும், பிளஸ் 2 மாணவர்களுக்கு, தலா 20 ஆயிரமும், பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், கல்வி அல்லாமல், இணை செயல்பாடுகளில் பங்கேற்கும் ஆர்வம், மாணவர்கள் மத்தியில் அதிகரிக்கும்,” என்றார்

No comments:

Post a Comment

புகழ் இழந்தால் என்ன நடக்கும் ? இந்த செய்தியை படிக்கவும்.

புகழ் இழந்தால் என்ன நடக்கும் ? தன்னுடைய வெண்கலச் சிலைக்கு முன் உறங்கிய புகழ்பெற்ற ஹாலிவுட் ஹீரோ (Arnold Schwarzenegger)அர்னால்டின் பரிதாப...