Friday, 29 September 2017

Income Tax - e Filling செய்வோருக்கு வருமான வரித்துறை, அறிவுரை

Income Tax - e Filling செய்வோருக்கு வருமான வரித்துறை, அறிவுரை


    வருமான வரி செலுத்துவோருக்கு அனுப்பப்படும் தகவல், சரியாக சென்றடைவதற்காக, தனி நபர்கள், தங்களின் விபரங்களை, இணையதளத்தில் பதிவு செய்ய, அத்துறை அறிவுறுத்தியுள்ளது.



     நாட்டில், 2.9 கோடி பேர், வருமான வரி செலுத்துவதற்காக, 'பான் கார்டு' பெற்றுள்ளனர். ஆனால், அவர்களில், 60 லட்சம் பேர் மட்டுமே, வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்கின்றனர். அதனால், அனைத்து தரப்பினரையும், வருமான வரி வலையில் சேர்க்க, 2017 - 18ம் நிதியாண்டில், பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. அதன் ஒரு பகுதியாக, தாங்கள் அனுப்பும் தகவல்கள், உரிய வருமான வரி கணக்குதாரருக்கு போகிறதா என்பதை உறுதிப்படுத்த, வருமான வரித்துறை, புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: வருமான வரியை, http://incometaxindiaefiling.gov.in என்ற எங்கள் இணையதளத்தில், ஏராளமானோர் செலுத்துகின்றனர். ஐந்து லட்சத்திற்கு அதிக வருவாய் உடையவர்கள், அந்த இணையதளத்தில், 'இ - பைலிங்' வாயிலாக, வருமான வரிக்கணக்குத் தாக்கல் செய்வது கட்டாயம். அவர்களில் சிலர், தங்கள் மொபைல் போன் எண் மற்றும் இ - மெயில் போன்றவற்றை அடிக்கடி மாற்றுகின்றனர். அதனால், நாங்கள் அனுப்பும் தகவல், சில சமயங்களில், அவர்களை சென்றடைவது இல்லை. அதனால், இ - பைலிங் செய்பவர்கள் அனைவரும், தங்கள் முகவரி, வங்கிக் கணக்கு, மொபைல் போன் எண், இ - மெயில் உள்ளிட்ட விபரங்களை, இணையதளத்தில், 'இ - பைலிங்' கணக்கில் பதிவு செய்ய வேண்டும்.பின், மொபைல் போனுக்கு, ஓ.டி.பி., எனும், ஒரு முறை பயன்படுத்தும், 'பாஸ்வேர்டு' அனுப்பி, தகவல்கள் சரிபார்க்கப்படும். இதன் வாயிலாக, வருமான வரி செலுத்துவோருக்கு, தகவல் சென்று சேர்வது உறுதி செய்யப்படும்.

Thursday, 28 September 2017

அரசு விழாக்களில் மாணவர்கள் படும் இன்னல்கள் தெரிவதில்லையா?- உங்கள் பெருமைகளை பேசுவது தான் உங்கள் நோக்கமா? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை அரசு விழாக்களில் மாணவர்களை அழைத்து சென்று பல மணி நேரம் காக்கவைத்து உங்கள் பெருமையை பேசுவதுதான் உங்கள் நோக்கமா? மாணவர்கள் படும் இன்னல்கள் பற்றி உங்களுக்கு அக்கறை இல்லையா? சிபிஎஸ்இ மாணவர்களை ஏன் அழைத்துச்செல்வதில்லை. அவர்கள் எம்ஜிஆர் பற்றி தெரிந்துக்கொள்ளக்கூடாதா? என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற அமர்வு அடுக்கடுக்கான கேள்வியை கேட்டுள்ளது.
அரசு நிகழ்ச்சிகளுக்கு பள்ளி மாணவர்களை அழைத்து செல்ல தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் ஆலோசனையுடன் தமிழக அரசு விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என்று ஆகஸ்ட் 30ஆம் தேதி கொடுத்த மனு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாற்றம் இந்தியா அமைப்பின் இயக்குனர் ஏ.நாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.
குறிப்பாக செப்டம்பர் 30ஆம் தேதி சேலத்தில் நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நிகழ்ச்சிக்கு மாணவர்களை அழைத்து செல்ல தடை விதிக்க வேண்டுமென இடைக்கால கோரிக்கை வைத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஆர்.சுப்ரமணியன் ஆகியோர் சேலம் நிகழ்ச்சிக்கு மாணவர்களை அழைத்து செல்ல தடைவிதித்தும், வழக்கு குறித்து பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
இந்நிலையில் இன்று இந்த வழக்கில் பதில் மனுத்தாக்கல் செய்த தமிழக பள்ளிகல்வித்துறை, தடையை நீக்க வேண்டும் என அவசர கோரிக்கை வைத்தது. அதனை ஏற்று வழக்கை நீதிபதிகள் மீண்டும் இன்று விசாரித்தனர்.
*அரசு தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண் வாதம்: எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு மாணவர்களை தகுந்த பாதுகாப்புடன், ஆசிரியர்களின் மேற்பார்வையிலேயே அழைத்து செல்கிறோம். அரசியலை தாண்டிய அரசு நிகழ்ச்சியாகவே நடத்தப்படுகிறது. அதன் ஒருபகுதியாக, மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் ஆலோசனைகள், சொற்பொழிவுகள் வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்படுவதாக அறிவிக்கப்படுவதால், மாணவர்கள் தாங்களாகவே ஆர்வமாக கலந்துகொள்வதுடன், யாரும் வற்புறுத்தி அழைத்து செல்லப்படவில்லை.
9 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பயன்பெறும் வகையிலான நிகழ்ச்சிக்கு அழைத்து செல்ல விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும். மாவட்ட அளவிலான பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களே மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பரிசு பெறுகின்றனர். மாணவர்கள் ஏதும் துன்பப்படுவதில்லை.
நீதிபதிகள்: கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் பிரிவு 27ன்படி தேர்தல் பணி, மக்கள்தொகை கணக்கெடுப்பு, பேரிடர் அவசரகால பணியை போன்றவை தவிர ஆசிரியர்களை வேறெந்த பணிக்கும் அழைத்து செல்லக்கூடாது என சொல்லியுள்ளது. அதை மீறும் வகையில் உள்ளது போலதான் உள்ளது. ஆசிரியர்களே கூடாது என்றால் அவர்கள் இல்லாமல் மாணவர்கள் மட்டும் எப்படி அழைத்து செல்ல முடியும்? தடைவிதித்த ஒரு சில மணி நேரத்தில் பதில் மனு தாக்கல் செய்து, இந்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு பட்டியலிட வைத்தலிருந்தே இந்த நிகழ்ச்சிக்கு அரசு எவ்வளவு முக்கியத்துவம் வழங்குகிறது என்பது தெரியவருகிறது.
மாலை நிகழ்ச்சியில் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமான பேச்சுகள் எதுவும் இல்லை. அரசின் பெருமையை பேசுவது தான் உங்கள் நோக்கமாக இருக்கிறது மாணவர்கள் படும் இன்னல்கள் உங்களுக்கு தெரிவதில்லை. பெருமைகளை காட்டிக்கொள்வதுதான் உங்களுக்கு முக்கியம். பிரிட்டன் ராணியும், பிரதமரும் வந்தால் கூட மாணவர்களை அழைத்து செல்ல அதிகாரம் இல்லை.
தொடர்ந்து 2 மணி நேர நிகழ்ச்சியில் மாணவர்கள் பங்கேற்கும்போது அவர்களின் மனநிலை ஒரே நிலைப்பாட்டிலா இருக்கும்? உங்களால் உட்கார்ந்து கவனிக்க முடியுமா? விவேகானந்தரே தற்போது வந்து உரையாற்றினால் கூட 100 பேருக்கு மேல் தொடர்ந்து கவனிக்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது. எம்.ஜி.ஆர் பற்றி தெரிந்து கொள்ள சி.பி.எஸ் மாணவர்களை அழைத்து செல்லவதில்லையா? ஏன் அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியதில்லையா? பாடதிட்டத்தை ஒப்பிடும்போது சி.பி.எஸ்.சி-யைவிட மாநில பாடதிட்டம் தரம் குறைவாக உள்ளது.
ஆனால் ஆசிரியரின் ஊதியம் மட்டும் அதிகமாக பெறுகின்றனர். தன்னம்பிக்கை நிகழ்ச்சிகளை இதே அமைப்பை கொண்டு சனிக்கிழமை தோறும் அந்தந்த பள்ளிகளில் மின்னனு முறையில் நடத்தலாமே? மாணவர்கள் நிகழ்ச்சிக்கு அழைத்து செல்லப்படுவது பெற்றோர்களுக்கு தெரிவிக்கபடுகிறாதா? கொண்டாட வேண்டாம் என்று சொல்லவில்லை. புத்தகம், லேப்டாப், சீருடை வழங்கி கூட கொண்டாடலாமே. மாவட்ட தலைநகரான சேலத்திற்கு வருவதற்கு, அந்த மாவட்டத்தில் உள்ளவர்களே 130 கிலோ மீட்டர் பயணிக்க வேண்டியுள்ளது, சிலர் மலைப் பிரதேசங்களிலிருந்து வர வேண்டியுள்ளது.
அரசு தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண்: மாநில பாடத்திட்டத்தை மேம்படுத்த குழுக்கள் அமைக்கபட்டுள்ளது. மாணவர்களை அழைத்து செல்ல கட்டுப்பாட்டு விதிகளை வேண்டுமானல் நீதிமன்றம் உருவாக்கி, பார்வையாளர் ஒருவரை நியமியுங்கள், ஆனால் தற்போதைய தடையை நீக்க வேண்டும்.
நீதிபதிகள்: புதிய பாடத்திட்டத்தை மாற்றுவதற்கு இன்னும் 50 ஆண்டுகள் கூட ஆகலாம். விதிமுறைகள் உருவாக்க வேண்டும் என்ற மனுதாரர் கோரிக்கை மீது தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் ஆணையம் என்ன நடவடிக்கை எடுத்தது? என்ன செய்கிறது மாநில ஆணையம்? ஏதும் சம்பவம் நடந்தால்தான் செயல்படுமா? பார்வையாளரை நியமிக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கமில்லை; உங்களின் புத்தாக்க நிகழ்ச்சிகளை ஒரே இடத்தில் நடத்துவதற்கு பதிலாக வாரந்தோறும் அந்தந்த பள்ளிகளில் நடத்தலாம் என்பதுதான்.
மனுதாரர் மாற்றம் இந்தியா இயக்குனர்.நாராயணன் : ஊக்குவிப்பு நிகழ்ச்சிகள் அனைத்தும் தொடர் நடவடிக்கையாக இருக்க வேண்டும். மாணவர்களின் மன அழுத்தும், தவறான முடிவெடுக்காமல் தடுப்பது தொடர்பான நடவடிக்கை எடுக்க தொடர்ந்து வலியுறுத்துகிறோம்.
ஆனால் இங்கு நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் அரசியல் தலைவர்களின் பேனர்கள் மட்டுமே ராட்சத அளவில் வைக்கப்படுகின்றன .இது மாணவர்கள் மத்தியில் அரசியல் குறித்த சூழ்நிலை தான் ஏற்படுத்தும் அதுமட்டுமல்லாமல், காலை முதலே முறையான ஏற்பாடுகள் இன்றி நிகழ்ச்சிக்காக காத்திருக்க வைக்கப்படுகின்றனர்.
(ஏற்கனவே நடந்த நிகழ்ச்சிகள் தொடர்பாக அரசு தரப்பிலும், மனுதாரர் தரப்பிலும் ஆவணங்கள், நிழற்படங்கள், வீடியோ பதிவுகள் தாக்கல் செய்யப்பட்டதையும் விசாரணையிண் இடையே நீதிபதிகள் ஆய்வு செய்தனர்)
அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஆர்.சுப்ரமணியன் ஆகியோர், மாணைவர்களை அழைத்து செல்ல விதிக்கபட்ட தடையை நீக்க வேண்டும் என்ற அரசின் தள்ளுபடி செய்தனர். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்ல ஏற்கெனவே விதிக்கப்பட்ட தடையை உறுதிசெய்தனர்.
நேற்று விதித்த தடையை உறுதிசெய்து உத்தரவிட்டனர். பரிசு பெறக்கூடிய மாணவர்கள் பெற்றோர் அனுமதியுடன் செல்லலாம் எனவும் நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஆர்.சுப்ரமணியன் அமர்வு உத்தரவிட்டது

பி.எல். சேர்க்கை : 53 மருத்துவர்கள் உள்பட10 ஆயிரம் பேர் விண்ணப்பம்


மூன்றாண்டு (எல்எல்பி,) சட்டப் படிப்பு சேர்க்கைக்கு 53 மருத்துவர்கள் உள்பட 10,635 பேர் விண்ணப்பித்துள்ளனர். 
இளநிலை சட்டப்படிப்பு சேர்க்கையை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. இதில், பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள ஆற்றல்சார் பள்ளியில் வழங்கப்படும் 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த ஹானர்ஸ் சட்டப்படிப்பு, 3 ஆண்டு ஹானர்ஸ் சட்டப்படிப்பு மற்றும் அரசு சட்டக்கல்லூரிகளில் வழங்கப்படும் 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப்படிப்பு ஆகியவற்றுக்கான சேர்க்கை இதுவரை நடந்து முடிந்துள்ளது. 
இப்போது அரசு சட்டக்கல்லூரிகளில் வழங்கப்படும் 3 ஆண்டு சட்டப்படிப்புக்கான சேர்க்கை அக்டோபர் 9-ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 14-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசை பட்டியல் கட்- ஆப் மதிப்பெண்கள், கலந்தாய்வு தேதி உள்ளிட்ட விவரங்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. 
53 மருத்துவர்கள்: இந்த 3 ஆண்டு சட்டப்படிப்புக்கு 53 மருத்துவர்கள், 1,364 பி.இ., பட்டதாரிகள், 8,654 இளநிலை பட்டதாரிகள் உள்பட 10,635 பேர் விண்ணப்பித்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட அதிகம் ஆகும். கடந்த 2016-17 ஆம் கல்வியாண்டில் 6,500 பேர் மட்டுமே இந்த 3 ஆண்டு எல்எல்பி படிப்புக்கு விண்ணப்பித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

ராஜஸ்தானி சங்கப் பொன்விழா : கல்வி உதவித்தொகை பெற ஏழை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்


ராஜஸ்தானி சங்கத்தின் (தமிழ்நாடு பிரிவு) பொன்விழாவையொட்டி நிகழாண்டில் கல்லூரிகளில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு மொத்தம் ரூ.50 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது. 
இது குறித்து ராஜஸ்தானி சங்கத்தின் தலைவர் அசோக் குமார் மேத்தா, செயலர் ராஜேந்திரகுமார் உள்ளிட்டோர் சென்னையில் வியாழக்கிழமை (செப்.28) செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தில் ராஜஸ்தானி சங்கம் கடந்த 1967-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் அண்ணாவால் தொடக்கி வைக்கப்பட்டது. இந்த ஆண்டின் பொன் விழா அக்டோபர் 1-ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் கொண்டாடப்படவுள்ளது. ராஜஸ்தானி சங்கத்தின் சார்பில் ஆண்டுதோறும் கல்லூரி மாணவர்கள் 1,200 பேருக்கு கல்வி உதவித்தொகையை வழங்கி வருகிறோம். இந்த உதவித் தொகை ஒரு பருவத்துக்கு மட்டுமல்லாமல் பட்டப்படிப்பு முடியும் வரை வழங்கப்படும். பொறியியல், கலை அறிவியல், மருத்துவம், சட்டம் உள்பட பல்வேறு துறைகளில் பயிலும் ஏழை மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். கல்விக்கான உதவிக்கான தொகை அந்தந்த மாணவர்கள் படிக்கும் கல்லூரிகளில் நேரடியாகச் செலுத்தப்படும். கடந்த ஆண்டில் ரூ.40 லட்சம் வழங்கப்பட்டது. பொன்விழாவை முன்னிட்டு இந்த ஆண்டு ரூ.50 லட்சம் வழங்க முடிவு செய்துள்ளோம். 
எப்படி விண்ணப்பிப்பது?தகுதியுள்ள மாணவர்கள் ராஜஸ்தானி சங்கம் தமிழ்நாடு பிரிவு, எண் 220, என்.எஸ்.சி. போஸ் சாலை, கோல்டன் காம்ப்ளக்ஸ், 4-ஆவது தளம், சௌகார்பேட்டை, சென்னை. தொலைபேசி எண்:- 044- 25392438 என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். அதேபோன்று கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டும் மாணவர்கள் குறித்த விவரங்களைத் தெரிவிக்கலாம். 
மேலும் rajasthaniassn@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரி  தொடர்பு கொள்ளலாம். ஏழை மாணவ, மாணவிகளுக்கு மட்டுமே உதவித் தொகைகள் வழங்கப்படும். 
இது தவிர, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடும் வகையில் சென்னை அடையாறில் உள்ள தர்மசாலா கட்டடத்தை மேம்படுத்துதல், தமிழத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 50 இடங்களில் கண்பரிசோதனை முகாம்களை நடத்துதல், தொழில், படிப்பு மற்றும் மருத்துவ வசதிக்காக சென்னைக்கு வரும் ராஜஸ்தான் மக்களுக்கு ராஜஸ்தான் பவன் கட்டுதல், கண்காட்சி போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அவர்கள் தெரிவித்தனர்

பிளஸ் 1, பிளஸ் 2 பாடத் திட்டத்தை மாற்றும் பணிகள் நவம்பர் 15-க்குள் நிறைவடையும்: பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தகவல்


senkottaiyan
பிளஸ் 1, பிளஸ் 2 பாடத் திட்டத்தை மாற்றும் பணிகள் நவம்பர் 15-ஆம் தேதிக்குள் நிறைவடையும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஈரோடு, திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான அறிவியல் நாடக விழாவை, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடக்கிவைத்துப் பேசியதாவது:
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு, பள்ளி மாணவ, மாணவிகளுக்காக எண்ணற்ற திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. வேலைவாய்ப்பை உருவாக்கவும், மத்திய அரசு கொண்டு வருகிற அனைத்துத் தேர்வுகளையும் எதிர்கொள்ளும் வகையில் தொலைநோக்குப் பார்வையோடு 412 இடங்களில் பயிற்சி மையங்கள் அமைக்கப்படுவதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளன. இனிவரும் கல்வி ஆண்டுகளில் கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்களை மாணவ, மாணவிகள் சந்திக்கவுள்ளனர். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் மாணவ, மாணவிகள் தயார்படுத்தப்படுவர்.
மேலும், மாணவ, மாணவிகளுக்கு ஸ்மார்ட் அட்டை வழங்கப்படவுள்ளது. 244 பாடப் பிரிவுகளில் மாணவ, மாணவிகள் படிக்கும்போது சிறப்பான வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவதில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது. மனதில் எண்ணுகிற எண்ணங்களை வெளிப்படுத்தும் வகையில் ஆசிரியர்கள் மாணவ, மாணவிகளுக்கு நல்ல முறையில் கல்வியைக் கற்றுக் கொடுக்க வேண்டும். 
மாநில அளவிலான இந்த அறிவியல் நாடக விழாவில் கலந்துகொள்ள இருக்கும் 32 மாவட்டங்களைச் சேர்ந்த 256 மாணவ, மாணவிகள் சிறப்பாகத் தங்களது நடிப்புத் திறமையையும், சமூதாய சிந்தனையையும் நாடகங்களில் காண்பித்து பங்குபெற வேண்டும். 
விழாவில், இறுதியில் தேர்வு செய்யப்பட்ட 2 சிறந்த குழுக்கள் தென்னிந்திய அளவில் நடைபெறும் அறிவியல் நாடக விழாவில் பங்கேற்க வாய்ப்பளிக்கப்படும் என்றார். விழாவில், ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக செயலர் கே.வி.இராமலிங்கம், மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர், ஈரோடு மக்களவைத் தொகுதி உறுப்பினர் செல்வகுமார சின்னையன், எம்.எல்.ஏ.க்கள் கே.எஸ்.தென்னரசு, ஈஸ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக, அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசுகையில், கல்வித் துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிறப்பான திட்டங்களால் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழகம் விளங்கும். பிளஸ் 1, பிளஸ் 2 பாடத் திட்டங்களை மாற்றும் பணிகள் நவம்பர் 15-ஆம் தேதிக்குள் நிறைவடைந்துவிடும். பாடத் திட்டங்களை மாற்றி அமைப்பதற்கான குழுவில் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி, சிறந்த கல்வியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். 
பாடத் திட்டத்தில் மாற்றம் கொண்டு வரும்போது, அரசுப் பள்ளி ஆசிரியர்கள், பேராசிரியர்களின் குழந்தைகளையும் அரசுப் பள்ளியில் சேர்க்க முன்வரும் நிலை ஏற்படும். கிராமப்புறங்களில் பின் தங்கியுள்ள மாணவர்கள் நலனைக் கருத்தில் கொண்டு 31 சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 500-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறுவது தவறான தகவல் என்றார்

TET - ஆசிரியர் தகுதித்தேர்வு வெயிட்டேஜ் முறையின் பாதிப்புகளை சரிசெய்ய குழு அமைப்பு - Puthiya Thalaimurai Video


TET - ஆசிரியர் தகுதித்தேர்வு வெயிட்டேஜ் முறையின் பாதிப்புகளை சரிசெய்ய குழு அமைப்பு - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்



Thanks.kalviseithi

பண்டிகை முன்பணம்( FESTIVAL ADVANCE ) கோரும் விண்ணப்பம்-ரூபாய் 5000/-

பண்டிகை முன்பணம்( FESTIVAL ADVANCE ) கோரும் விண்ணப்பம்-ரூபாய் 5000/-

பண்டிகை முன்பணம்( FESTIVAL ADVANCE ) கோரும் விண்ணப்பம்-ரூபாய் 5000/-

பள்ளியில் தூய்மை பணி மாணவர்கள் ஆர்வம்


வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் என்.எஸ்.எஸ்., மாணவர்கள் பல்வேறு சமூக சேவை பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பொது இடங்களில் சிதறிக்கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து குப்பை தொட்டியில் போடும் பணியிலும், பள்ளியை சுற்றிலும் சுகாதார சீர்கேடு ஏற்படாமல் தடுக்கும் வகையில் சுத்தமாக வைக்கும் பணிகளையும் மாணவர்கள் செய்கின்றனர்.
பள்ளி விடுமுறை நாட்களில் மாணவர்கள், 25 பேர் இணைந்து என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் சிவன்ராஜ் தலைமையில், பள்ளியை சுற்றியுள்ள முட்புதர்களை அகற்றி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
வரும், 30 ம் தேதி வரை நடக்கும் முகாமிற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர்கள் ராகவன், அருண்பாண்டி ஆகியோர் செய்துள்ளனர்.

Wednesday, 27 September 2017

வேலைவாய்ப்புக்கான பாடத்திட்டம்; செங்கோட்டையன் தகவல்

”வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் பாடத்திட்டங்களில் மாற்றம் செய்யப்படும்,” என, காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் தரிசனத்திற்கு வந்த, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன், நேற்று மாலை தரிசனம் செய்தார்.
முன்னதாக, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழகத்தில், கல்வித் துறையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மத்திய அரசு நடத்தும் போட்டி தேர்வுகளுக்காக, 412 தேர்வு மையங்கள் துவங்கப்படும். அடுத்த மாதம் முதல், அந்த மையங்கள் செயல்படும். மேலும் கூடுதல் மையங்கள் திறக்கப்படும்.
அதுபோல, 32 மாவட்டங்களின் தலைநகரங்களில், அரசு நுாலகங்களில், ஐ.ஏ.எஸ்., தேர்விற்கான நுால்கள் அளிக்கப்படும்.சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்திற்கு இணையான பாடத்திட்டம் கொண்டு வரப்படும். கற்றலுக்கு ஏற்றபடி, வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், பாடத்திட்டங்களில் மாற்றம் செய்யப்படும். இவ்வாறு அவர் 

7வது சம்பள கமிஷன் கணக்கீடு பதிவிறக்கம் செய்ய

 7 the pay commission pay & Arrier calculater download !!!

7 the pay commission pay & Arrier calculater download !!!

மெட்ரிக் பள்ளிகள்சி.பி.எஸ்.இ.,க்கு மாற தமிழக அரசு அனுமதி.

சி.பி.எஸ்.இ.,க்கு மாற தமிழக அரசு பச்சைக்கொடி

தமிழக மெட்ரிக் பள்ளிகள் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்துக்கு மாற தடையில்லா சான்றிதழ் வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.தமிழகத்தில் அரசு, அரசு உதவி மற்றும் தனியார் மெட்ரிக் என 58 ஆயிரம் பள்ளிகள் தமிழக பாடத்திட்டத்தில் செயல்படுகின்றன.
மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் 600 பள்ளிகள் மட்டுமே இயங்கின.இந்நிலையில் 'நீட்' தேர்வு, ஜே.இ.இ., நுழைவுத் தேர்வு போன்றவற்றை சி.பி.எஸ்.இ., நடத்துவதால் பெரும்பாலான தனியார் பள்ளிகள் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்துக்கு மாற விரும்புகின்றன. அதற்கு தமிழக அரசிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும்.அதை வழங்குவதில் தமிழக அரசு தயக்கம் காட்டியது. அரசியல்வாதிகள் தலையீட்டில் பணம் கொடுத்து, இந்த சான்றிதழை பல பள்ளிகள் பெற்றன.

தற்போது, 'நீட்' தேர்வுக்கு பின் நிலைமை மாறி விட்டது. சி.பி.எஸ்.இ.,க்கு மாறுதல் கேட்கும் பள்ளி நிர்வாகிகளை அழைத்து பேசி மிக வேகமாக சான்றிதழ் கொடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. ஐந்து மாதங்களில் 500க்கும் மேற்பட்ட பள்ளிகள் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்துக்கு மாற சான்றிதழ் பெற்றுள்ளன.அவற்றுக்கு வரும் கல்வியாண்டில் சி.பி.எஸ்.இ., அந்தஸ்து கிடைக்கும். இன்னும், ஆயிரக்கணக்கான பள்ளிகள் தடையில்லா சான்றுக்கு விண்ணப்பித்து உள்ளன.கடந்த கல்வியாண்டில், 600ஆக இருந்த சி.பி.எஸ்.இ., பள்ளிகள் இந்த கல்வியாண்டில் 800ஐ தாண்டி உள்ளன.

டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு: பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்


டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ரெ.இளங்கோவன் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்தி: பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது. இதனடிப்படையில், முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வழங்கப்பட்டுள்ள பின்வரும் அறிவுரைகளை பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கவும், அவர்களது செயல்பாட்டினைக் கண்காணித்து டெங்கு ஒழிப்பை ஒரு இயக்கமாகச் செயல்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.
அறிவுறுத்தல்களின் விவரம்: பள்ளி வகுப்பறை மற்றும் கழிவறைகளைச் சுற்றித் தண்ணீர் தேங்காமல் பராமரிக்க வேண்டும். குடிநீர்ப் பானை மற்றும் தண்ணீர் தொட்டிகள் மூடி வைக்கப்பட வேண்டும். 
பள்ளி வளாகம் மற்றும் வீடுகளில் கொசுக்கள் முட்டையிட ஏதுவாக உள்ள தேங்காய் ஓடுகள், பழைய டயர்கள், பூந்தொட்டிகள், தட்டுகள், தண்ணீர் தொட்டிகள், பழைய கண்ணாடி, பிளாஸ்டிக் பாட்டில்கள், வடிகால்கள், பள்ளி கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்களில் உள்ள பொருள்கள் போன்ற தண்ணீர் தேங்கும் இடங்களை தொடர்ந்து கண்காணித்து தண்ணீர் தேங்காத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்க வேண்டும். 
மருத்துவரின் உதவியுடன் டெங்கு, சிக்குன்குன்யா காய்ச்சல் குறித்த அறிகுறிகள் குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடையே ஏற்படுத்த வேண்டும். மாணவர்கள் காய்ச்சி வடிகட்டிய பாதுகாப்பான குடிநீரை அருந்த வேண்டுமென எடுத்துக் கூற வேண்டும். அதேபோன்று பாதுகாப்பான முறையில் தயார் செய்யப்பட்ட உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும் என்றும் மாணவர்களிடம் தெரிவிக்க வேண்டும். 
பள்ளிகளில் நடைபெறும் காலை இறை வணக்கக் கூட்டத்தின்போது, மாணவர்களிடம் இதுகுறித்த விழிப்புணர்வு அறிவுரைகள் வழங்கப்பட வேண்டுமென தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்த, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

விஜயதசமியில் சூடுபிடிக்கும் ’அட்மிஷன்


Home
: விஜயதசமியை முன்னிட்டு, உரிமம் இல்லாத மழலையர் பள்ளிகளில் நடக்கும், அட்மிஷன் நடைமுறைகளை ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற, கோரிக்கை வலுத்துள்ளது.
கோவை மாவட்டத்தில்,197 நர்சரி, பிரைமரி பள்ளிகள் உள்ளன. இதில், 77 பள்ளிகள் மட்டுமே, முறையாக உரிமத்தை புதுப்பித்துள்ளன. மற்ற பள்ளிகள், அங்கீகாரம் பெற்று புதுப்பிக்காமலும், அங்கீகாரமின்றியும் இயங்குகின்றன.
இம்மழலையர் பள்ளிகளுக்கு, 43 வகை வரன்முறைகளை, தமிழக அரசு நிர்ணயித்துள்ளது. இவை முழுமையடையும் பட்சத்தில், மூன்று மாதங்களுக்குள் உரிமம் வழங்க, கல்வித்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கும்பகோணம் தீ விபத்துக்கு பின், மழலையர் பள்ளிகளுக்கான உரிமம் சார்ந்த நடைமுறைகள், கராறாக பின்பற்றப்பட்டன. ஆனால், சில மாவட்டங்களில், சங்கங்களின் நெருக்கடியாலும், அதிகாரிகளின் மெத்தனத்தாலும், உரிமம் வழங்கும் நடைமுறைகளில், சுணக்கம் ஏற்பட்டு வருகிறது.
குறிப்பாக, கோவை மாவட்டத்தில், கடந்த மூன்று ஆண்டுகளாகவே, மழலையர் பள்ளிகளை, ஒழுங்குப்படுத்தும் பணிகள் மெத்தனமாகவே நடக்கின்றன. இப்பணிகள் மேற்கொள்ள வேண்டிய, ஏ.இ.இ.ஓ., பணியிடை பயிற்சிக்கு செல்வதால், கோப்புகள் நகராமல் தேங்கி கிடப்பதாக, தனியார் பள்ளி உரிமையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.இச்சூழலை சாதகமாக பயன்படுத்தி கொண்டு, சிலர் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாத, ஓட்டு கட்டடங்களில், பெயர் பலகையை மட்டும் தொங்கவிட்டு, வகுப்பு நடத்துகின்றனர்.
போதிய விழிப்புணர்வு இல்லாததால், பெற்றோரும் இப்பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கின்றனர். தற்போது விஜயதசமி முன்னிட்டு, அனைத்து மழலையர் பள்ளிகளும், மாணவர் சேர்க்கையில் தீவிரம் காட்டி வருகின்றன. அடிப்படை வசதிகளற்ற பள்ளிகளில், சேர்க்கை நடக்காமலிருக்க, கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.
சமூக ஆர்வலர்கள் சிலர் கூறுகையில், ’அங்கீகாரம் பெற்ற மழலையர் பள்ளிகள் எவை என்ற தகவலை, கல்வித்துறை வெளியிட வேண்டும். மேலும், அடிப்படை வசதிகளின்றி இயங்கும் பள்ளிகளை மூடுவதன் மூலம், பெற்றோர் விழிப்படைவர்.
’கல்வியாண்டு துவங்கி மூன்று மாதங்கள் முடிந்த நிலையிலும், இப்பணிகள் மேற்கொள்ளாமல், கல்வித்துறை அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுகின்றனர். அசம்பாவிதங்கள் ஏற்படும் முன், ஆய்வுப்பணிகளை துவக்கினால் பயனுள்ளதாக இருக்கும்’ என்றனர்.

மாவட்ட பள்ளிகளுக்கு 2ம் பருவ பாடப்புத்தகம் வினியோகம்


Home
 இரண்டாம் பருவத்துக்கான, பாடப்புத்தகங்கள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில், ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரை, முப்பருவ கல்வி முறை செயல்படுத்தப்படுகிறது. அதில், தற்போது முதல் பருவ தேர்வு முடிந்து, விடுமுறை விடப்பட்டுள்ளது. இரண்டாம் பருவ வகுப்பு, அக்., 4 முதல் தொடங்க உள்ளது.
இந்நிலையில், அனைத்து பள்ளிகளுக்கும் பாடப்புத்தகங்கள் வினியோகிக்கும் பணி நடந்து வருகிறது. சேலம் மாவட்டத்தில், ஒவ்வொரு பள்ளிக்கும் தேவைப்படும் விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள் எண்ணிக்கை குறித்து, தேவைப்பட்டியல் பெறப்பட்டிருந்தது.
அதன்படி, நோடல் (புத்தகம் அனுப்பப்பட்ட பள்ளி) பள்ளிகளுக்கு, புத்தகம் மற்றும் நோட்டுகள் வினியோகிக்கப்பட்டு விட்டன. அங்கிருந்து, தலைமை ஆசிரியர்கள், ஓரிரு நாட்களில், தங்கள் புத்தகங்களை சேகரித்து வைத்துக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளி திறக்கும் நாளில், கட்டாயமாக மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புத்தகம் வினியோகம்; அரசு உத்தரவு


Home
’பள்ளி திறக்கும் நாளில், மாணவர்களுக்கு, இலவச புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும்’ என, ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுஉள்ளனர்.
தமிழக சமச்சீர் கல்வியில், 9ம் வகுப்பு வரையில், முதல் பருவ பாடங்கள் முடிந்து, தேர்வு நடத்தப்பட்டுள்ளது. செப்., 24௪ முதல், தேர்வு மற்றும் பண்டிகை கால விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அக்., 3ல்,பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன.
இந்நிலையில், பள்ளிகளை திறந்த அன்றே மாணவர்களுக்கு, இரண்டாம் பருவ புத்தகங்களை வழங்கும் வகையில், முன் ஏற்பாடுகளை மேற்கொள்ள, தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
முதல் நாள் என்பதால், அரை நாளில் விடுமுறை விடுவது, பாடங்கள் நடத்தாமல் ஆசிரியர்கள், ’ஓபி’ அடிப்பது போன்ற சம்பவங்கள் நடக்கக் கூடாது; முதல் நாளே, இரண்டாம் பருவ பாடங்கள் துவங்கப்பட வேண்டும் என, கல்வித் துறை இயக்குனர்கள் எச்சரித்துள்ளனர்

Flash News: ஆசிரியர் தகுதி தேர்வு 2013 க்கு வெயிட்டேஜ் மாற்ற குழு தனது பணியை தொடங்கியது.


Sunday, 17 September 2017

TNTET - ஆசிரியர் தகுதித் தேர்வு வெயிட்டேஜ் முறை மாற்றம்?


நாமக்கல்லில் இன்று நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டு செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பின்வருமாறு கூறினார்:


புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 2500 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு வரும் 21ம் தேதி பணி நியமன ஆணை வழங்கப்படும் என்றார்.
மேலும் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் முறையில் ஏற்பட்டுள்ள  குறைபாடுகளைக் களைய குழு அமைக்கப்பட்டுள்ளது.குழுவின் அறிக்கையின் அடிப்படையில் விரைவில் வெயிட்டேஜ் முறை மாற்றி அமைக்கப்படும் என்றார்.

Wednesday, 13 September 2017

Tuesday, 12 September 2017

ம.பி. பள்ளிகளில் வருகை பதிவை வாசிக்கும்போது யெஸ் சாருக்கு தடை- ஜெய்ஹிந்த் சொல்ல உத்தரவு

 மத்திய பிரதேச அரசு பள்ளிகளில் வருகை பதிவை வாசிக்கும் போது யெஸ் சார், மேடம் என மாணவர்கள் கூறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக ஜெய்ஹிந்த் என சொல்வதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Madhya Pradesh students to answer roll call with Jai Hind
இது தொடர்பாக மத்திய பிரதேச மாநில கல்வித் துறை அமைச்சர் விஜய் ஷா கூறியதாவது:
மத்திய பிரதேச மாநிலம் சாட்னா மாவட்டத்தில் முதல் கட்டமாக அரசு பள்ளிகளில் வருகை பதிவை வாசிக்கும் போது யெஸ் சார், மேடம் என சொல்வதற்கு தடை விதிக்கப்படுகிறது. இதற்கு பதிலாக மாணவர்கள் ஜெய்ஹிந்த் என சொல்ல வேண்டும்.
இது வரும் அக்டோபர் 1-ந் தேதி முதல் நடைமுறைக்கு வரும். இதனைத் தொடர்ந்து பிற மாவட்டங்களிலும் இது நடைமுறைக்கு வரும்.
இவ்வாறு விஜய் ஷா கூறினார்

இன்று வெளியான முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு பட்டியல் பார்த்தீர்களா.?சிறப்பு கட்டுரை ..

இன்று வெளியான முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு பட்டியல் பார்த்தீர்களா...

பட்டியலில் ஒவ்வொரு பாடத்திலும் பல இடங்களை நிரப்ப குறிப்பிட்ட மதிப்பெண் பெற்றவர்கள் இல்லாத காரணத்தால் காலி இடங்கள் (not available) மிகவும் அதிகமாக உள்ளது.

இந்த இடங்களுக்கு உரியவர்களை நியமித்தால் தான் தமிழக பள்ளிகளில் காலியாக இருக்கும் பணி இடங்களை நிரப்ப முடியும்.
இந்த ஆண்டு மேல்நிலை கல்வியில் இரண்டு பொது தேர்வுகள் இருப்பதால் காலி பணியிடங்கள் நிரப்பி ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

அந்த காலி பணியிடங்கள் நிரப்ப மூன்று விதமான வழிகள் அரசு முன்  உள்ளதாகவே கருதுகிறேன்.

1. அரசாணையில் தளர்வு கொண்டு வந்து முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான தேர்ச்சி மதிப்பெண்களை குறைத்து நடந்து முடிந்த தேர்வு மூலம் புதிய ஆசிரியர்களை தேர்வு செய்வது.

2. காலி பணியிடங்கள் நிரப்ப அடுத்த தேர்வை உடனடியாக அறிவிப்பது. (வாய்ப்புகள் அதிகம் உள்ளது)

3. காலி பணியிடங்களை குறைக்க பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளிப்பது.

இந்த மூன்று வழிகளில் இரண்டாவது வழியான (அடுத்த தேர்வை அறிவிப்பது) இதற்கு தான் அதிக வாய்ப்பு உள்ளது என்று கருதுகிறேன்.

நண்பர்களே பழையதை மற்றும் கடந்து போனவற்றை நினைக்காமல் உடனடியாக இயல்பு நிலைக்கு வாருங்கள். தேர்வு அறிவிப்பு வரும் போது வரட்டும். படிக்க தொடங்குங்கள்.

காலத்தை வென்று சூழ்நிலையை மாற்றும் சக்தி படைத்தவர்கள் நீங்கள்.

வெற்றி வசமாகும் காலம் உங்களுக்காகவே காத்துக் கொண்டு இருக்கிறது.

நன்றி.அல்லா பக்ஸ்

Sunday, 10 September 2017

ஆசிரியர்கள், 'ஸ்டிரைக்' அறிவிப்பு: பாடங்கள் பாக்கி - இன்று தேர்வு துவங்குவதால் மாணவர் அச்சம்


Home
ஆசிரியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தால், பாடங்கள் நடத்தி முடிக்கப்படவில்லை. இந் நிலையில், காலாண்டு தேர்வு இன்று துவங்குவதால், மாணவர்கள் பீதி அடைந்துள்ளனர்.

தமிழகம் முழுவதும், அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ' சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, செப்டம்பர், ௭ முதல், காலவரையற்ற போராட்டம் நடந்து வருகிறது. வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, சமீபத்தில், தடை விதித்தது. இதை, சட்டப்படி எதிர்கொள்வதாக அறிவித்துள்ள, ஜாக்டோ - ஜியோ, இன்று முதல் போராட்டத்தை தொடர்வதாக தெரிவித்து உள்ளது.
இந்நிலையில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், இன்று முதல் காலாண்டு தேர்வு துவங்குகிறது. இதற்கான பாடங்களை, தனியார் பள்ளிகள் ஏற்கனவே முடித்து விட்டன. ஆனால், அரசு பள்ளிகளில் இன்னும், 25 சதவீத பாடங்கள் பாக்கி உள்ளன. பட்டதாரி மற்றும்
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், ஆகஸ்ட் முதலே, போராட்ட ஏற்பாடுகளிலும், போராட்டங்களிலும் ஈடுபட்டு உள்ளதால், பாடங்கள் முழுமையாக நடத்தப்படவில்லை.

பாடங்களே நடத்தி முடிக்காத நிலையில், இன்று காலாண்டு தேர்வு துவங்க உள்ளது. இதற்கான வினாத்தாள்களை, அரசு தேர்வுத்துறை தயாரித்து, மாவட்ட வாரியாக அனுப்பி உள்ளது. பிளஸ்1க்கு, புதிய விதிகளின்படி, பாடத்துக்கு, 100 மதிப்பெண் வீதம், வினாத்தாள் தயாரிக்கப்பட்டு உள்ளது. காலாண்டு தேர்வில் மதிப்பெண் குறைவானால், பெற்றோர்கள் வருத்தப்படுவர் என்ற, அச்சத்தில் மாணவர்கள் உள்ளனர்.
பிளஸ் 1 வகுப்புக்கு புதிய வினாத்தாள்


மத்திய அரசு நடத்தும், 'நீட், ஜே.இ.இ.,' போன்ற நுழைவு தேர்வுகளில், தமிழக மாணவர்களால் ஜொலிக்க முடியவில்லை. அதற்கு, பள்ளிகளில், பிளஸ் ௨வுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்ததும், பிளஸ் ௧ பாடத்தை நடத்தாமல் விட்டதுமே காரணம் என, தெரியவந்தது. அதனால், பிளஸ் 1 வகுப்புக்கு, இந்த ஆண்டு முதல், பொது தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வி செயலர், உதயசந்திரனின் தலைமையிலான குழுவினர், இதற்காக புதிய விதிகளை உருவாக்கினர். இந்தவிதிகளின்படி, பிளஸ் 1 வகுப்புக்கு, பாட வாரியாக, தலா, 100 மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில், இன்று முதன்முதலாக, காலாண்டு தேர்வு துவங்குகிறது.தேர்வு நேரமானது, மூன்று மணி என்பதிலிருந்து, 2:30 மணி நேரமாக குறைக்க பட்டு உள்ளது. தமிழ், ஆங்கிலம்ஆகிய மொழி பாடங்களுக்கு, தலா 2 தாள்களுக்கு தேர்வு நடத்தப்படும். ஒவ்வொரு தாளுக்கும், தலா, 90 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் தயாரிக்க படுகிறது. 10 மதிப்பெண் அக மதிப்பீடாக வழங்கப்படும்.
தேர்வு கண்காணிப்பில் சத்துணவு பணியாளர்கள்?


பெரும்பாலான அரசு பள்ளி ஆசிரியர்கள், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, பிளஸ் 1, பிளஸ் 2வுக்கு, பாடம் எடுக்கும் முதுநிலை ஆசிரியர்கள், ௧௦ம் வகுப்புக்கு பாடம் நடத்தும், பட்டதாரி ஆசிரியர்களில் பெரும்பாலானோர், போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

ஆசிரியர்கள் பற்றா குறையால், சத்துணவு அமைப் பாளர்கள் மற்றும் தற்காலிக ஆசிரியர்கள், தேர்வு கண் காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படலாம் என, 

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 85 ஆயிரம் பேருக்கு நோட்டீஸ் - சந்திக்க தயார் என ஆசிரியர்கள் பேட்டி


சென்னை: போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஜாக்டோ ஜியோ சங்கங்களை சேர்ந்த அரசு ஊழியர்கள் 85 ஆயிரம் பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப அனைத்து துறைகளுக்கும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
Ads By ZincScroll to Continue
7-வது ஊதிய குழுவின் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும் என்பது உள்பட 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 7ஆம்தேதி முதல் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Government notice issue to 85000 employees
முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அரசு அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் 60 சங்கங்களை சேர்ந்த ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்கவில்லை. இவர்கள் தங்களது போராட்டத்தை அக்டோபர் 15ஆம்தேதி வரை ஒத்திவைத்தனர்.
 
இதனால் ஜாக்டோ ஜியோ சங்கம் 2 ஆக உடைந்தது. இதில் 17 சங்கங்களை சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணிக்கு செல்லாமல் ஆர்ப்பாட்டம்- மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களது போராட்டத்துக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை தடை விதித்திருந்தாலும் தடையை மீறி போராட்டம் நடைபெற்று வருகிறது.
சென்னையில் நேற்று மாலை செய்தியாளர்களிடம் இதனை, ஜக்டோ-ஜியோ நிர்வாகிகள் தெரிவித்தனர். கோரிக்கைகளை முன்வைத்து, அனைத்து மாவட்டங்களிலும் நாளை ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் அவர்கள் கூறினர்.
செப்டம்பர் 12ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என குறிப்பிட்ட ஜக்டோ-ஜியோ நிர்வாகிகள், தமிழக அரசிடம் இருந்து சாதகமான அறிவிப்பு வரவில்லை எனில், வரும் 13ம் தேதி முதல் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்தனர்.
உயர் நீதிமன்ற உத்தரவை மதிக்கும் வகையில் அரசு ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று தலைமை செயலாளர் சுற்றறிக்கை வெளியிட்டிருந்தார். ஆனாலும் ஜாக்டோ ஜியோ அமைப்பின் ஒரு பிரிவினர் வேலைக்கு செல்லாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் நேற்று எடுத்த கணக்கெடுப்பு படி 43 ஆயிரத்து 450 ஆசிரியர்கள், 41 ஆயிரத்து 550 அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப அனைத்து துறை அதிகாரிகளுக்கும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அந்தந்த துறை அதிகாரிகள் இதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர்.
இதுகுறித்து அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் சுப்பிரமணியன் கூறுகையில் போராட்டத்தில் ஈடுபட்டால் நோட்டீஸ் அனுப்புவதும் சம்பளத்தை நிறுத்துவதும் அரசு எடுக்கும் வழக்கமான நடைமுறைதான். நாங்கள் அதை எதிர் கொண்டு எங்கள் கோரிக்கை நிறைவேற போராடுகிறோம்.
எங்களை பொறுத்தவரை எந்தவித நடவடிக்கை மேற்கொண்டாலும் அதை எதிர்கொள்ள தயார். எங்கள் உரிமைகளை நாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்றும் அவர் கூறியுள்ளார்

Friday, 8 September 2017

ஆங்கிலப் பேச்சின் கூறுகள் (Parts of Speech)



உலகில் எந்த மொழியானாலும் ஒரு மொழியின் மூலம் சொற்களே (Words) ஆகும். ஒரு மொழியில் புழங்கும் சொற்களை வைத்தே அது எம்மொழி என அறிய முடிகிறது. சொற்கள் எனும் போது சொற்களின் பயன்பாடுகள் வெவ்வேறானவை. பெயர்களை அல்லது பொருற்களை குறிப்பதற்கான சொற்கள் பெயர்சொற்கள் என்றும், வினையை  விவரிப்பதற்கான சொற்கள் வினைச்சொற்கள் என்றும், பொருற்களின் தன்மையை விவரிப்பதற்கான சொற்கள் பெயரெச்சங்கள் என்றும், வினையின் தன்மையை விவரிப்பதற்கான சொற்கள் வினையெச்சங்கள் என்றும், ஒருவரின் அல்லது ஒன்றின் பெயரைக் குறிப்பிடாமல் சுட்டிக்காட்டிப் பேசுவதற்கான சொற்கள் சுட்டுப்பெயர்ச்சொற்கள் என்றும், வாக்கியங்களை அல்லது சொற்களை இணைப்பதற்கு இடையே பயன்படும் சொற்கள் இணைப்புச்சொற்கள் என்றும்,   பேசும் மொழியில் பயன்படும் சொற்களின் பயன்பாட்டை எளிதாக விளங்கிக்கொள்வதற்கும், கற்பதற்கும் சொற்களை பல்வேறு கூறுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றை தமிழில் “பேச்சின் கூறுகள்” என்று அழைக்கப்படுகின்றது. சிலர் “சொற்களின் வகைகள்” என்றும் கூறுவர்.

ஆங்கிலத்தில் பேச்சின் கூறுகளை எட்டாக வகைப்படுத்தியுள்ளனர். அவைகளே “ஆங்கிலப் பேச்சின் கூறுகள்” (Parts of Speech in English) ஆகும்.

ஆங்கிலப் பேச்சின் கூறுகள் (Parts of Speech in English)

Nouns – பெயர்சொற்கள்
Verbs – வினைச்சொற்கள்
Adjectives – பெயரெச்சங்கள் / பெயருரிச்சொற்கள்
Adverbs – வினெயெச்சங்கள் / வினையுரிச்சொற்கள்
Pronouns – சுட்டுப்பெயர்ச்சொற்கள்
Prepositions – முன்னிடைச்சொற்கள்
Conjunctions – இணைப்புச்சொற்கள் / இடைச்சொற்கள்
Interjections - வியப்பிடைச்சொற்கள்

மேலதிக விளக்கங்களை கீழே பாருங்கள்.

Nouns – பெயர்சொற்கள்

பொருற்கள், நபர்கள், இடங்கள் போன்றவற்றை குறிக்கும் பெயர்கள் அல்லது சொற்கள் பெயர்ச்சொற்களாகும்.

எடுத்துக்காட்டாக:

Manager - நிர்வாகி
Car - மகிழுந்து
England - இங்கிலாந்து
Sarmilan - சர்மிலன்
Tamil - தமிழ்

He is a Manager.
அவர் ஒரு நிர்வாகி. மேலும் >>>

Verbs – வினைச்சொற்கள்

வினையை அல்லது செயலை குறிக்கும் சொற்கள் வினைச்சொற்களாகும்.

எடுத்துக்காட்டாக:

Do - செய்
Come - வா
Speak - பேசு
Ask - கேள்
Go - போ

do a job.
நான் செய்கிறேன் ஒரு வேலை. மேலும் >>>

Adjectives – பெயரெச்சங்கள் / பெயரடைகள் / பெயருரிச்சொற்கள்

ஒரு பொருளின், இடத்தின், நபரின் (பெயரின்) குணத்தினை அல்லது தன்மையை மேலும் விவரித்துக்கூற பயன்படுபம் சொற்கள் பெயரெச்சங்ளாகும். இவை சுட்டுப்பெயர்களை விவரித்துக்கூறவும் பயன்படும்.

எடுத்துக்காட்டாக:

Red - சிகப்பு
Yellow - மஞ்சள்
Big - பெரிய
Small - சிறிய
Beautiful - அழகான

She is a beautiful girl.
அவள் ஒரு அழகான பெண். மேலும் >>>

Adverbs – வினெயெச்சங்கள் / வினையடைகள்  / வினையுரிச்சொற்கள்

வினையின் அல்லது செயலின் தன்மையை மேலும் விவரித்து பேசுவதற்கு பயன்படும் சொற்கள் வினையெச்சங்கள் எனப்படும்.

எடுத்துக்காட்டாக:

Usually - சாதாரணமாக
Really - உண்மையாக/ உண்மையில்
Immediately - உடனடியாக
Quickly - வேகமாக
Softly - மென்மையாக

Usually I do a job.
சாதாரணமாக நான் செய்கிறேன் ஒரு வேலை. மேலும் >>>

Pronouns – சுட்டுப்பெயர்கள் / பிரதிப்பெயர்கள் / சுட்டுப்பெயர்ச்சொற்கள்

ஒன்றின் அல்லது ஒருவரின் பெயரைக் குறிப்பிடாமல்; அதற்கு பதிலாக சுட்டிக்காட்டி பேசுவதற்கு பயன்படும் சொற்கள் சுட்டுப்பெயர்கள் அல்லது சுட்டுப்பெயர்ச்சொற்கள் என அழைக்கப்படும்.

எடுத்துக்காட்டாக:

He - அவன்
She - அவள்
It - அது
him - அவனை
her - அவளை

Sarmilan speaks in English.
சர்மிலன் பேசுகிறான் ஆங்கிலத்தில்.

He speaks in English.
அவன் பேசுகிறான் ஆங்கிலத்தில். மேலும் >>>

Prepositions – முன்னிடைச்சொற்கள்

ஒரு வாக்கியத்தின் பெயர்சொற்களுக்கும் சுட்டுப்பெயர்சொற்களுக்கும் முன்பாக பயன்படும் சொற்கள் முன்னிடைச்சொற்களாகும்.

எடுத்துக்காட்டாக:

in - இன், இல்
at - இல், ஆல்
on - இல், மேல்
for - காக
since - இருந்து

Do you work on Mondays?
நீ வேலை செய்கிறாயா திங்கள் கிழமைகளில்? மேலும் >>> 

Conjunctions – இணைப்புச்சொற்கள் / இடைச்சொற்கள்

இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட சொற்கள் மற்றும் வாக்கியங்கள் இடையே இணைப்பை ஏற்படுத்தும் சொற்கள் இணைப்புச்சொற்களாகும். இதனை இடையிணைப்புச் சொற்கள் என்றும் கூறலாம்.

எடுத்துக்காட்டாக:

and - உம்
but - ஆனால்
or - அல்லது
than - விட
because - ஏனெனில்

I ate bread and butter.
நான் உரொட்டியும் வெண்ணையும் சாப்பிட்டேன். மேலும் >>>

Interjections - வியப்பிடைச்சொற்கள்

பேச்சின் பொழுது வியப்பு, ஆச்சரியம் போன்ற உணர்வை வெளிப்படுத்தப் பயன்படும் சொற்கள் வியப்பிடைச்சொற்களாகும்.

எடுத்துக்காட்டாக:

Wow!
Ha!
Hi!
hello!
Oh!

Wow! I won the match!
வோவ்! நான் ஆட்டத்தில் வென்றேன்! மேலும் >>>

Eight Parts of Speech in a Sentence

ஆங்கில மொழியின் பிரதானப் பேச்சின் கூறுகள் எட்டும் ஒரே வாக்கியத்தில் எவ்வாறு பயன்படுகின்றன என்பதை கீழுள்ள எடுத்துக்காட்டுகள் ஊடாக பார்க்கலாம்.

Sarmilan goes to School. (Three Parts)
Noun Verb Preposition Noun
சர்மிலன் போகிறான் பாடசாலைக்கு.

Sarmilan and his sister go to school. (Five Parts)
Noun Conjunction Pronoun Noun VerbPreposition Noun
சர்மிலனும் அவனது தங்கையும் போகிறார்கள் பாடசாலைக்கு.

Sarmilan and his little sister go to school. (Six Parts)
Noun Conjunction Pronoun AdjectiveNoun Verb Preposition Noun
சர்மிலனும் அவனது சிறிய தங்கையும் போகிறார்கள் பாடசாலைக்கு.

Wow! Sarmilan and his little sister go toschool happily. (All Eight Parts of Speech)
Interjection Noun Conjunction PronounAdjective Noun Verb Preposition NounAdverb
வாவ்! சர்மிலனும் அவனது சிறிய தங்கையும் போகிறார்கள் பாடசாலைக்கு மகிழ்ச்சியுடன்

புகழ் இழந்தால் என்ன நடக்கும் ? இந்த செய்தியை படிக்கவும்.

புகழ் இழந்தால் என்ன நடக்கும் ? தன்னுடைய வெண்கலச் சிலைக்கு முன் உறங்கிய புகழ்பெற்ற ஹாலிவுட் ஹீரோ (Arnold Schwarzenegger)அர்னால்டின் பரிதாப...