Wednesday, 27 September 2017

புத்தகம் வினியோகம்; அரசு உத்தரவு


Home
’பள்ளி திறக்கும் நாளில், மாணவர்களுக்கு, இலவச புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும்’ என, ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுஉள்ளனர்.
தமிழக சமச்சீர் கல்வியில், 9ம் வகுப்பு வரையில், முதல் பருவ பாடங்கள் முடிந்து, தேர்வு நடத்தப்பட்டுள்ளது. செப்., 24௪ முதல், தேர்வு மற்றும் பண்டிகை கால விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அக்., 3ல்,பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன.
இந்நிலையில், பள்ளிகளை திறந்த அன்றே மாணவர்களுக்கு, இரண்டாம் பருவ புத்தகங்களை வழங்கும் வகையில், முன் ஏற்பாடுகளை மேற்கொள்ள, தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
முதல் நாள் என்பதால், அரை நாளில் விடுமுறை விடுவது, பாடங்கள் நடத்தாமல் ஆசிரியர்கள், ’ஓபி’ அடிப்பது போன்ற சம்பவங்கள் நடக்கக் கூடாது; முதல் நாளே, இரண்டாம் பருவ பாடங்கள் துவங்கப்பட வேண்டும் என, கல்வித் துறை இயக்குனர்கள் எச்சரித்துள்ளனர்

No comments:

Post a Comment

புகழ் இழந்தால் என்ன நடக்கும் ? இந்த செய்தியை படிக்கவும்.

புகழ் இழந்தால் என்ன நடக்கும் ? தன்னுடைய வெண்கலச் சிலைக்கு முன் உறங்கிய புகழ்பெற்ற ஹாலிவுட் ஹீரோ (Arnold Schwarzenegger)அர்னால்டின் பரிதாப...