வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் என்.எஸ்.எஸ்., மாணவர்கள் பல்வேறு சமூக சேவை பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பொது இடங்களில் சிதறிக்கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து குப்பை தொட்டியில் போடும் பணியிலும், பள்ளியை சுற்றிலும் சுகாதார சீர்கேடு ஏற்படாமல் தடுக்கும் வகையில் சுத்தமாக வைக்கும் பணிகளையும் மாணவர்கள் செய்கின்றனர்.
பள்ளி விடுமுறை நாட்களில் மாணவர்கள், 25 பேர் இணைந்து என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் சிவன்ராஜ் தலைமையில், பள்ளியை சுற்றியுள்ள முட்புதர்களை அகற்றி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
வரும், 30 ம் தேதி வரை நடக்கும் முகாமிற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர்கள் ராகவன், அருண்பாண்டி ஆகியோர் செய்துள்ளனர்.
பள்ளி விடுமுறை நாட்களில் மாணவர்கள், 25 பேர் இணைந்து என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் சிவன்ராஜ் தலைமையில், பள்ளியை சுற்றியுள்ள முட்புதர்களை அகற்றி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
வரும், 30 ம் தேதி வரை நடக்கும் முகாமிற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர்கள் ராகவன், அருண்பாண்டி ஆகியோர் செய்துள்ளனர்.
No comments:
Post a Comment